வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக சூர்யா தயாராகி வரும் நிலையில், ‘வாடிவாசல்’ படத்தை மூன்று பாகங்களாக உருவாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம்.
‘விடுதலை-2’ படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“வசூல் குறித்து யோசிக்காமல், நல்ல படைப்பை ரசிகர்களுக்குத் தருவோம்,” என்று கூறிவிட்டாராம் சூர்யா.

