கொள்ளைநோய் சூழலில் சுமுகமாக நடந்தேறிய சிவராத்திரி விழா

கொள்ளைநோய் சூழலில் சுமுகமாக நடந்தேறிய சிவராத்திரி விழா

2 mins read

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லின் கட்டு­பா­டு­க­ளுக்­கி­டையே பல கோயில்­களில் இவ்­வாண்டு சிவ­ராத்­திரி விழா சுமு­க­மாக நடந்­தே­றி­யது.

கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங், தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், இந்­தி­யத் தூதர் திரு பெரி­ய­சாமி கும­ரன் ஆகி­யோர் கேலாங் ஈஸ்ட் பகு­தி­யில் அமைந்­துள்ள ஸ்ரீ சிவன் கோயி­லில் மார்ச் 11ஆம் தேதி­யன்று இரவு நேரம் தொடங்­கிய விழா­வில் கலந்­து­கொண்­ட­னர். இது குறித்து அமைச்­சர் எட்­வின் தம் ஃபேஸ்புக் பக்­கத்­தில், "பக்­தர்­கள் இரவு முழு­வ­தும் கண் விழித்து, கட்­டுப்­பாடு­டன் விர­தம் இருந்து, வழி­பட்டு, தியா­னம் செய்­வர். இவ்­வாறு வழி­படு­வது, ஒரு­வ­ருக்கு நிம்­மதி அளிப்­ப­து­டன் பாவங்­க­ளி­லி­ருந்து தூய்­மைப்படுத்தும் ­என்று நம்­பப்­ப­டு­கிறது," என்று பதி­விட்­டார்.

சிவ­ராத்­தி­ரிக்கு இரண்டு நாட்­களுக்கு முன்­னரே இணைய முன்­பதி­வுக்கான இடங்­கள் அனைத்­தும் நிரப்­பப்­பட்­டன என்று ஸ்ரீ சிவன் கோயில் நிர்­வா­கக் குழுத் தலை­வர் திரு வெங்­க­டேஷ் நாரா­ய­ண­சு­வாமி கூறி­னார்.

"அரை மணி நேர அவ­கா­சத்­திற்­குப் பக்­தர்­கள் பதிவு செய்­த­னர். அந்த அரை மணி நேரத்­தில் 125 பக்­தர்­கள் மட்­டுமே பதிவு செய்ய முடி­யும். இந்த ஏற்­பாட்­டால் கூட்­டத்தை நிர்­வ­கிக்க முடிந்­தது. அத்­து­டன் வய­தா­ன­வர்­கள் வீட்­டி­ல் இ­ருந்­த­ப­டியே நிகழ்ச்­சியை இணை­யம்­வழி பார்க்­க­வும் ஊக்­கு­வித்­தோம்," என்­றார் திரு வெங்­க­டேஷ்.

சிவ­ராத்­தி­ரி­யின் நான்கு கால பூஜை­களில் இரண்­டா­வது காலத்­தில் பால்­கு­டம் எடுக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. மார்ச் 11ஆம் தேதி­யன்று இரவு 8.30 முதல் 11.45 மணி வரை பக்­தர்­கள் பால்­கு­டம் வழங்க அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

பக்­தர்­கள் பால்­கு­டங்­களில் இருந்த பாலை ஒரு தட்­டில் ஊற்­றிய பின், பாலை நேர­டி­யாக மூல­வரின் சன்­னி­திக்கு அனுப்­பும் ஓர் இயந்­திர அமைப்­பும் புது­மை­யா­கப் பொருத்­தப்­பட்­டது. அது­போக பக்­தர்­கள் தங்­கள் அர்ச்­ச­னை­க­ளைச் செலுத்த ஒரு தாளில் அவர்­க­ளின் பெயர், நட்­சத்­தி­ரம் எழுதி வழங்க முடிந்­தது என்று இவ்­வாண்­டின் புதிய ஏற்­பா­டு­க­ளைப் பற்றி விவ­ரித்­தார் திரு வெங்­க­டேஷ்.

சிவ­ராத்­தி­ரிக்­குக் கோயி­லில் நீண்ட நேரம் இருக்க முடி­ய­வில்லை என்ற ஏக்­கம் பக்­தர்­களிடையே இருந்­தது. இருப்­பி­னும் கிரு­மித்­தொற்று கட்­டுப்­பா­டு­களைக் கருத்­தில் கொண்டு பக்­தர்­கள் முடிந்­த­வரை விழா­வில் ஈடு­பட ஏற்­பாடு செய்­யப்­பட்­டது நம்­பிக்­கை­ய­ளிக்­கும் சூழல் என்­றார் திரு வெங்­க­டேஷ்.

"சிவ­ராத்­தி­ரிக்கு கோயி­லுக்­குள் அமர்ந்­தி­ருக்க முடி­ய­வில்லை என்­றா­லும் ஒரு வகை நிம்­ம­தி­யும் அமை­தி­யும் இருந்­தது. இந்த மாற்­ற­மும் நன்­றாக இருந்­தது.கொவிட்-19 சூழல் சீராகி மீண்­டும் வழக்­கம்­போல் வழி­பா­டு­கள் நடக்­க­வேண்­டும் என்­பதே என் பிரார்த்­தனை," என்­றார் பக்­த­ர் கும­ரன் செல்­வம், 41.