செவித்திறன் இல்லாதபோதிலும் முத்திரை பதிக்கும் ரமேஷ் மெய்யப்பன்

செவித்திறன் இல்லாதபோதிலும் முத்திரை பதிக்கும் ரமேஷ் மெய்யப்பன்

3 mins read
Google News Preferred Icon

விரு­து­பெற்ற நாட­கக் கலை­ஞ­ராக வலம் வரும் சிங்­கப்­பூ­ரர் ரமேஷ் மெய்­யப்­ப­னின் நாட­கங்­கள், உரை­யா­டல்­கள் இல்­லா­தவை.

தமது விறு­வி­றுப்­பான உடல், முக பாவ­னை­க­ளா­லும் புத்­தாக்­கம் மிக்க மேடை வடி­வ­மைப்பு

களா­லும் உல­க­ள­வில் பார்வை

யாளர்­களை இவர் வியக்க வைத்­துள்­ளார்.

2008 முதல் ஸ்காட்­லாந்­தில் வசிக்­கும் ரமேஷ், மன­ந­லம், பாலி­யல் வன்­கொ­டுமை, சமத்­து­வம் என சமூ­கத்­துக்குக் குரல் கொடுக்க இந்­தக் குர­லில்லா நாட­கங்­களை மேடை ஏற்றி வரு­கி­றார். பிறப்­பி­லி­ருந்தே இவ­ருக்­குச் செவித்­தி­றன் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சை­கை­ மொழி வழி மற்­ற­வர்­க­ளி­டம் தமது கருத்­து­களை வெளிப்­ப­டுத்­து­கி­றார்.

தமிழ்­நாட்­டில் பிறந்த ரமே­ஷுக்­கும் அவ­ரது தங்­கைக்­கும் செவித்­தி­றன் குறை­பாடு இருப்­பது இளம் வய­தி­லேயே தெரிய வந்­தது. இரு­வ­ருக்­கும் உகந்த கல்வி கிடைக்­க­வேண்டி சிங்­கப்­பூ­ரில் குடி­யே­றி­யது ரமே­ஷின் குடும்­பம். ஆனால், அக்­கா­ல­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரில் சைகை மொழி அறிந்­தி­ருந்த ஆசி­ரி­யர்­கள் வெகு சிலரே. சிங்­கப்­பூர் செவித்­தி­றன் குறை­பாடு உள்­ளோ­ருக்­கான பள்­ளி­யில் சேர்

வ­தற்கு முன்­னர் சாதா­ரண தொடக்­கப்­பள்­ளி­யில்­தான் இரு உடன்பிறப்புகளும் பயின்­ற­னர்.

குறை இல்­லாத மாண­வர்­

க­ளை­விட எவ்­வ­ளவு கடி­ன­மாக உழைத்­தா­லும் அதற்­கான பலன் கிட்­ட­வில்லை என்­பது ரமே­ஷைத் தொடர்ந்து உறுத்­தி­யது. கல்­வி­யில் மெல்ல மெல்ல ஆர்­வம் இழந்த அவரை, நாட­கக் கலை

அர­வ­ணைத்­துக்கொண்­டது.

முதன்­மு­த­லில் சிங்­கப்­பூ­ரின் செவித்­தி­றன் குறை­பாடு உடை­யோரை ஏற்ற ஹை! தியேட்­டர் நாட­கக் குழு­வில் இணைந்த ரமே­ஷுக்கு, வச­ன­மில்லா நாட­கங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

தனக்­கேற்ற ஒரு தளத்தை அங்கு அவர் கண்­டறிந்தார்.

நாட­கங்­களை நடித்­தும் இயக்­கி­யும் அனு­ப­வம் பெற்­றார்.

உட­லைக் கொண்டு உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­து­வது ரமே­ஷுக்கு இயல்­பாக இருந்த ஒரு திறன். அதையே வாழ்க்­கைத்

தொழி­லாகக் கொள்­ள­வேண்­டும் என்ற முனைப்­பில் அவர் உழைத்­தார். தேசிய கலைகள் மன்றத்தின் உபகாரச் சம்பளம் பெற்று லிவர்­பூல் கல்­விக்­க­ழ­கத்­தில் நாட­கப் பட்­டக்­கல்வி பயில இங்­கி­லாந்து சென்ற அவ­ரின் பய­ணம், தற்­போது அங்கு இரு­பது ஆண்­டு­

க­ளுக்கு மேலா­கத் தொடர்ந்து வரு­கிறது.

ரமேஷ் அது­வரை அறிந்­தி­ராத பரந்து, விரிந்த நாடக உல­கம் அவரை இங்­கி­லாந்­தில் வர­வேற்­றது. ஆனால் ஆங்­காங்கே இன­வா­தத்­தை­யும், மாற்­றுத் திற­னாளி என்ற பாகு­பாட்­டை­யும் எதிர்கொண்டார் ரமேஷ். அங்கு செவித்­தி­றன் குறைபாடு உள்ளோருக்காக இயங்கும் நாடக நிறு­வ­னங்­கள் சில மட்­டுமே. அச்­ச­ம­யத்­தில் அவருக்குத் தெரிந்­த­ள­வில், ஸ்காட்­லாந்­தில் அவர் மட்டுமே செவித்­தி­றன் குறை­பா­டு­டைய ஒரே தொழில்­முறை நாடகக் கலை­ஞர்.

அதனால் அங்கு சாதா­ரண நாடக கலை­ஞர்­க­ளு­டன் இணைந்து பணி­பு­ரி­ய­வேண்­டிய கட்­டா­யம் அவ­ருக்கு இருந்­தது.

இச்­ச­வால்­கள் ரமே­ஷின் இலட்­சி­யங்­க­ளுக்கு உரமூற்றி வந்­தன. கலைக்­கல்­விக்கு பேர்­போன 'ராயல் கன்­சர்­வேட்­டோ­யர் ஸ்காட்­லாந்து' பள்ளியில் வழங்­கப்­படும் செவித்திறன் இல்லாதோருக்கான இளங்­கலை படிப்­பில் காட்சி நாடகப் பாடத்­தொ­குப்பை வடி­

வ­மைத்­துள்ளார் ரமேஷ். தற்­போது அப்­பா­டத்­தொ­கு­தியை அங்கு கற்­பித்­தும் வரு­கி­றார்.

தனது நாடகங்களை சிங்கப்பூருக்கு அவ்வப்போது கொண்டு வந்துள்ளார் ரமேஷ். தனது காலத்தைக் காட்டிலும் தற்போது அதிகளவிலான விழிப்புணர்வு இருப்பதை அவர் பாராட்டினார்.

"என்னுள் இத்தகைய வளம் பொதிந்திருப்பதை எனது குறைபாட்டினால் மட்டுமே அறிந்துகொண்டேன். இப்படி பிறந்ததில் மகிழ்ச்சியே அடைகிறேன்," என்று புன்னகையுடன் சைகை மொழியில் தெரிவித்தார் ரமேஷ்.