ஃபிரான்டியர் சமூக மன்றம் 'தமிழ் விழா 2018' எனும் நிகழ்ச்சியை இம்மாதம் 1ஆம் தேதியன்று நடத்தியது. நிகழ்ச்சியில் வாழ்வில் வளமும் நலமும் சேர்ப்பது உறவா? நட்பா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தமிழ் எழுத்துத் திறன் போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. போட்டியில் மொத்தம் 78 மாணவர்கள் பங்கெடுத்தனர். சிறுகதைப் போட்டியில் முதல் இடம் பிடித்த பெண்டமியர் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அழகர்சாமி துரைகுமாருக்கு விஜய் டிவி புகழ் திரு மணிகண்டன் பரிசை வழங்குகிறார். படம்: ஃபிரான்டியர் சமூக மன்றம்
தமிழ் விழா 2018
1 mins read
-

