On March 11th, Singapore South Asia Chamber of Commerce and Industry (SACCI) and CIMB Bank jointly organized their first seminar recapping the business-friendly measures announced at Budget 2025. This follows from the agreement they had signed last year. Wong Sook Ling, Executive Director of BDO Tax Advisory Pte Ltd, discussed tax changes that were announced. She addressed some businesses' concerns that the 50% Corporate Income Tax (CIT) rebate favours profitable companies. She said that this is not meant to be a targeted or permanent scheme and there are other schemes. She also lauded the $2,000 CIT Rebate Cash Grant as a measure that helps lossmaking companies as well. Mr William Lim, Head of the Progressive Wage Mark Admin Office at the Singapore Business Federation, shared about the increased government contributions for wage increases for low-income workers under the Progressive Wage Credit Scheme. He also talked about the One-Stop Payroll (OSP) initiative by the government. Dr. Chinnu Palanivelu, Chairman of SSACCI, discussed business growth and internationalization support for businesses, especially SMEs, while Dr B Ramanathan, Vice Chairman of SSACCI, shared about support in areas like Workforce Skills Training, job redesign and seniors employment.
Generated by AI
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் வர்த்தகங்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை நினைவுகூர்ந்தது மார்ச் 11ஆம் தேதி சிஐஎம்பி வங்கியில் நடந்த கருத்தரங்கு.
சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தகத் தொழிற்சபையும் (SSACCI), சிஐஎம்பி வங்கியும் முதன்முறையாக இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தன. சென்ற ஆண்டு இரு அமைப்புகளுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.
முக்கிய வரி மாற்றங்கள் குறித்து ‘பிடிஓ’ (BDO) வரி ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வோங் சூக் லிங் பகிர்ந்தார்.
முக்கிய வரி மாற்றங்கள் குறித்து ‘பிடிஓ’ (BDO) வரி ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வோங் சூக் லிங் பகிர்ந்தார். - படம்: ரேமண்ட் லீ
நிறுவனங்களுக்காக அறிவிக்கப்பட்ட 50 விழுக்காட்டு வருமான வரித் தள்ளுபடி, லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கே சாதகமானது என சில வர்த்தகங்கள் கூறியுள்ளதாக திருவாட்டி வோங் கூறினார்.
“இது ஒரு பொதுவான திட்டமே, நிரந்தரமானதன்று. அரசாங்கம் மக்களின் கருத்துகளை ஏற்று, நஷ்டத்திலிருக்கும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 2024 முதல் $2,000 ரொக்கமும் வழங்கத் தொடங்கியுள்ளது. மற்ற திட்டங்களும் உள்ளன,” என அவர் கருத்துரைத்தார்.
இந்த $2,000 ரொக்கம், செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கே என்பது இவ்வாண்டு புதிதாக அறிமுகமான நிபந்தனை என்பதையும் அவர் சுட்டினார்.
படிப்படியான சம்பள உயர்வு முறையின்கீழ் தகுதிபெறும் குறைந்த வருமான ஊழியர்களுக்கான சம்பள உயர்வில் இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் அரசாங்கப் பங்களிப்பு அதிகரிக்கவுள்ளதை விளக்கினார் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் படிப்படியான சம்பள உயர்வுக்கான முத்திரை நிர்வாகப் பிரிவுத் தலைவர் வில்லியம் லிம்.
அரசாங்கத்தின் முயற்சியான ஒரே இடத்தில் சம்பளப் பட்டியல் சேவை (One-Stop Payroll) குறித்தும் அவர் விவரித்தார்.
சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் படிப்படியான சம்பள உயர்வுக்கான முத்திரை நிர்வாகப் பிரிவுத் (PW Mark Admin Office) தலைவர் வில்லியம் லிம். - படம்: ரேமண்ட் லீ
சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தகத் தொழிற்சபைத் தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு, வர்த்தகங்கள் உள்ளூரில் வளரவும் வெளிநாட்டிற்கு விரிவடையவும் கிடைக்கக்கூடிய உதவிகளை விவரித்தார்.
வர்த்தகங்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவிகளை விவரித்தார் SSACCI தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு. - படம்: ரேமண்ட் லீ
தெற்காசிய வர்த்தகத் தொழிற்சபைத் துணைத் தலைவர் முனைவர் பா.இராமநாதன், ஊழியர்த் திறன் மேம்பாடு, வேலை மறுவடிவமைப்புத் திட்டங்கள், மூத்தோருக்கான வேலை ஆதரவு போன்றவற்றை விளக்கினார்.
SSACCI துணைத் தலைவர் முனைவர் பி.ராமநாதன், ஊழியர்த் திறன் மேம்பாடு அறிவிப்புகள் பற்றிப் பேசினார். - படம்: ரேமண்ட் லீ