ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலுடனான நீண்டகாலப் பிணைப்பைப் பகிர்ந்துகொண்ட பக்தர்

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலுடனான நீண்டகாலப் பிணைப்பைப் பகிர்ந்துகொண்ட பக்தர்

1 mins read
55dcc0bd-948f-4494-8fba-25e5ee421a75
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலின் பழைய வளாகத்தில் திரு சேகர் நாயுடு நிற்பதைக் காட்டும் படம். - படம்: பே. கார்த்திகேயன்

தோ பாயோவில் அமைந்துள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், முன்பு சாமர்செட் வட்டாரத்தில் இருந்த காலத்திலிருந்தே விநியோக வாகன ஓட்டுநர் சேகர் நாயுடுக்கு அக்கோயிலுடன் அணுக்கமான பிணைப்பு இருந்துவருகிறது.

1982ஆம் ஆண்டு அக்கோயில் இடமாற்றம் செய்யப்பட்டபோது அவருக்கு 12 வயது. அந்த இளம் வயது முதலே குடும்பத்தின் அனைத்து மங்கல நிகழ்ச்சிகளுக்கும் அங்குச் செல்வது அவரது வழக்கம்.

“ஆலயம் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டவுடன் என் தந்தை, குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் என அனைவரும் அழுது, மனமுடைந்து போயினர். ஆனால், அம்மனுக்கு வேறு ஓர் இடம் கிடைத்தது அவர்களுக்கு மனநிம்மதி அளித்தது,” என்று அவர் கூறினார்.

அந்தக் காலக்கட்டத்தில் ஆலயத்தில் பணிபுரிந்த பண்டாரத்திற்கும் தம் குடும்பத்திற்கும் அணுக்கமான உறவு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார். அவருடன் ஒரு வேளை உணவு உண்டு மகிழ்வோம்,” என்றார் சேகர் நாயுடு.

அந்தக் கோயிலின்மீது அத்தகைய அன்பு கொண்டிருந்ததால் தமது திருமணத்தையும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலிலேயே செய்துகொண்டதாக அவர் கூறினார்.

“எங்கள் வீட்டில் பிறந்தநாள், திருமண நாள் என எதுவாக இருந்தாலும், அந்த ஆலயத்திற்குத்தான் செல்வோம்,” என்றார் அவர்.

தற்போது பீஷானில் வசித்துவரும் அவர் இப்போதும் தொடர்ந்து ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்.

குறிப்புச் சொற்கள்