கடந்த ஞாயிற்றுகிழமை ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் முதல் முறையாக நடைபெற்ற சுகாதார விழாவில் கிட்டத்தட்ட 1-00 பக்தர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். கூ டெக் புவாட் மருத்துவ மனையோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மருத்துவப் பரிசோதனையோடு ஆரோக்கியத்தை ஒட்டிய விரிவு ரையும் கேள்வி பதில் அங்கமும் நடைபெற்றன. எலும்பியல் மருத்துவர் டாக்டர் சாத்தப்பனும் முதியோர் மருத்து வத்துக்கான நிபுணர் டாக்டர் வித்யா தர்ஷினி பிள்ளையும் சிறப்புரைகள் ஆற்றி கேள்வி பதில் அங்கத்திலும் கலந்துகொண் டனர். "மேலும் அதிக இந்திய அமைப்புகள் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்பது இந்த விழாவின் முக்கிய நோக்கம். உதவி தேவைப்படுபவர்களுடன் நமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள மிகுந்த ஆர்வம் கொண் டுள்ளோம்," என்றார் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் திரு என். ஆனந்தராஜா.
செய்தி: எஸ். வெங்கடேஷ்வரன்