லிட்டில் இந்தியாவில் பொங்கல் பட்டிமன்றம்

லிஷா இலக்கிய மன்றமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகமும் இணைந்து நடத்திய பொங்கல் பட்டிமன்றம் இம்மாதம் 13ஆம் தேதி கேம்பல் லேனில் உள்ள பொங்கல் திருவிழா மேடையில் நடந்தேறியது.
'தமிழர்களின் பண்பாடு, கலை இலக்கியம் இன்று தளர்­கிறதா? வளர்கிறதா?' என்ற தலைப்­பையொட்டி வளர்கிறது, தளர்கிறது ஆகிய இரு அணி­களிடையே விவாதம் நடத்தப்­ பட்டது. இப்போட்டிக்கு தமிழ­கத்தின் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் திரு மணிகண்டன் நடுவராக இருந்தார்.
'வளர்கிறது' அணிக்கான பேச்சாளர்களாக ரம்யா சுரேஷ், ராம்குமார் சந்தானம், கண்ணன் சேஷாத்ரி ஆகியோர் பேசினர். 'தளர்கிறது' அணியில் இருந்த பேச்சாளர்கள் ராஜேஷ்­குமார் தர்மலிங்கம், அகிலா ஹரி­ ஹரன், முனைவர் ராஜி சீனி­ வாசன்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்­தி­னராக டாக்டர் என்.ஆர்.­ கோவிந்தன் கலந்துகொண்டார்.
"சுமார் 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் முன்னிலை­யில் சுமார் மூன்று மணி நேரத்­ திற்கு, பட்டிமன்றம் தொய்வின்றி நடை­பெற்றது," என்றார் 'வளர்­கிறது' அணியின் பேச்சாளர் திருமதி ரம்யா சுரேஷ்.
நிகழ்ச்சியில் பேச்சாளர்களின் கருத்துகள் சிரிக்கவும் சிந்திக்க­வும் வைத்தன.
'வளர்கிறது' அணியில் பல சிறந்த கருத்துகள் முன்வைக்கப்­பட்டன. சிங்கப்பூர் தாய்மொழி கற்றல் வாரத்தின் சிறப்பும் பட்டி­மன்றத்தில் எடுத்துரைக்கப்­ பட்டது.
அத்துடன் ஆப்பிரிக்­காவில் பொங்கல் திருவிழா அர­சாங்கப் பண்டிகையாக கொண்­டாடப்­படுவது பற்றியும் பொங்கல் விழா இன்றுவரை குத்துவிளக்கு ஏற்றி, கோலங்களில் நல்வரவு எழுதப்­பட்டு கொண்டாடப்படு­கிறது என்பதைப் பற்றியும் நகைச்­ சுவையுடன் கலந்த பாணியில் கூறப்பட்டது.
'தளர்கிறது' அணியிலும் கருத்துகளுக்குப் பஞ்சம் இல்லை. பல்லாங்குழி, பச்சைக்­குதிரை போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் இப்போது விளையாடப்படுவதில்லை என்றும் இப்போதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்கள் வீட்டிற்குள் நம்மைத் தேடி வந்து கெடுக்கின்றன என்றும் அந்த அணியின் பேச்சா­ளர்கள் விவாதித்தனர்.
அத்துடன், நாம் மறந்துப்போன 92 நாட்டு மாடுகளின் சிறப்பையும் அரிசிகளின் அழகிய பெயர்­களையும், ஆழையாட்டம், சக்கை­ யாட்டம், துடுப்பாட்டம் போன்ற மறந்துபோன ஆட்டங்களின் சிறப்பைப் பற்றியும் கூறி பார்வை­யாளர்களை வியப்பில் ஆழ்த்­ தினர்.
இறுதி அங்கமாக பட்டிமன்ற நடுவர் அவரின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
தமிழர்களின் பாரம்பரியம் இன்றுவரை நிலைத்திருக்கிறது என்பதற்கு சான்றாக முத்து­ராமலிங்கதேவர் வீரன் வாஞ்சி­ நாதனுக்கு மகனாக மாறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை எடுத்துரைத்தார்.
'கலைவாணர்' என்ற பழங்­காலத்து நகைச்சுவை நடிகரின் சொல்லாடல் பற்றியும் அழகாக நினைவுகூர்ந்தார்.
மற்றோர் உதாரணத்திற்கு அப்துல் கலாம் மாணவர்களுடன் நடத்திய ஒரு கலந்துரையாடலில் கூறிய விஷயங்களையும் அரங்­கத்தினருக்கு அவர் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!