பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வண்ணமய 'பாஸ்தா'வைக் கொண்டு ஆகப் பெரிய ரங்கோலி கோலம் வரையும் முயற்சியில் சுமார் 170 பேர் ஈடுபட்டனர்.
விஸ்மா கேலாங் சிராயில் நடைபெற்ற இந்தச் சாதனை முயற்சியில் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாத்திமா லத்தீஃப் கலந்து கொண்டார். "பல்வேறு இனங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர் களை ஒன்றிணைத்து ஒருவர், மற்றொருவரின் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் கேலாங் சிராய் முன்மாதிரியாக விளங்குகிறது," என்றார் திருவாட்டி ஃபாத்திமா.
'பாஸ்தா'வைக் கொண்டு ஆகப் பெரிய ரங்கோலி கோலத்தை வரையும் முயற்சியில் சுமார் 170 பேர் ஈடுபட்டனர். படம்: கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழு