தாம் சண்முகம்
எதிர்காலத்தில் புதிய தொழில் நுட்பத்தில் தமிழ் பரவலாக்கப்பட வேண்டும், இருவழித் தொடர்புத் திறன்கள் அதில் இடம்பெற வேண்டும் என தான் விரும் புவதாக செல்வி நிருபமா பாலாஜி தன்னுடைய படைப்பில் தெரி வித்தார். பாத்லைட் பள்ளியில் பயிற்சியாளராகப் பணிபுரியும் இவர், 'இளமையான புதுமைத் தமிழ் - நான் கற்றதும் இனி காண்பதும்' என்ற தலைப்பில் அனுபவத்தை பங்கேற்பாளர் களுடன் பகிர்ந்துகொண்டார்.
புத்தாக்கத்தொழில்நுட்பத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத் தும் நோக்கில் 'மின்னிலக்கத் தமிழ் - ஒரு கற்றல் அனுபவம்', என்ற நிகழ்வு தமிழ்மொழி விழா வின் ஒரு அங்கமாக பிக்ஸிபிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தின் ஏற்பாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று லோட்டஸ்@நோரிஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
'மின்னாக்க எண்ணத் திரட்டு போட்டி' என்ற திட்டத்தின் அறி முக நிகழ்வாக நடைபெற்ற இதில் மாணவர்கள், இளையர்கள், முதி யவர்கள் என பலரும் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங் கள் குறித்து கற்றுக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இத்திட்டத் தில் பங்கேற்பவர்கள் மிகைமெய் நிகர், சாட்போட் போன்ற தொழில் நுட்பத்தில் தமிழ்மொழியை பயன் படுத்தி செயல்கள், நிரல்கள் முதலியவற்றை உருவாக்குவார் கள். தமிழ்மொழி கற்றல் வளர்ச் சிக் குழுவின் நிதி ஆதரவுடன் நடைபெறும் இத்திட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இத்திட்டத் தின் பயிற்றுநரும் பிக்ஸிபிட் நிறு வனத் தலைவருமான திரு சி.குணசேகரன் பங்கேற்பாளர் களிடம் இதற்கான செயல்முறை விளக்கம் அளித்தார். அதில் பங் கேற்பாளர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு முயற்சி செய்து பார்த்தார்கள்.
இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்ட, காமன்வெல்த் உயர் நிலைப்பள்ளி மாணவி தான்யா குமரவேல், தொழில்நுட்பம் வழி தமிழை எளிதாகக் கற்றுக்கொள் ளும் முறைகளை அறிந்துகொண்ட தாகவும், சக மாணவர்களிடம் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார். பாலர்பருவக் குழந் தைகள் கல்வியாளரான திருமதி ராஜேஸ்வரி, இந்நிகழ்ச்சி எல்லா வயதினருக்கும் ஏற்றதாக இருந் ததாகவும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து துணைப்பாட வகுப்பு நடத்துவதற் கான மென்பொருளை உருவாக் கத் திட்டத்தின் வழி கற்றுக் கொள்ள இருப்பதாக கூறினார்.