முனைவர் அப்துல் காதர் 'கிழக்கினை எழுப்பும் விளக்குகள்' எனும் தலைப்பில் ஆற்றிய உரை நல்ல வரவேற்பைப் பெற்றது. பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய் திருந்த கலந்துரையாடலுக்கு முன் பேராசிரியர் அப்துல் காதர் உரையாற்றினார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன், பேராசிரியர் அப்துல் காதர் எழுதிய சில கவி தைகளை மேற்கோள்காட்டினார்.
'கிழக்கினை எழுப்பும் விளக்குகள்'
1 mins read
சுமார் 80 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய பேராசிரியர் அப்துல் காதர். படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் -