இம்மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இயோ சூ காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் சிங்கப்பூர் வெண்ணிலா பட்டிமன்றக் குழுவின் பட்டிமன்றம் நடை பெறுகிறது.
“ இன்றைய சூழலில் பண்டிகை களைக் கொண்டாடுவதில் அதிகம் வெளிப்படுவது பகட்டா? பண்பாடா?” என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்தின் நடுவராக ரெ.சோமசுந்தரம் பணியாற்றுவார்.
பகட்டே எனும் அணியில் முனைவர் ராஜி சீனிவாசன், எழுத்தாளர் கிருத்திகா, பொறியியலளர் அருள் ஓஸ்வின் ஆகியோரும் பண்பாடே எனும் அணியில் கவிஞர் மு.சேவகன், தகவல் தொழில் நுட்பத்துறை யியலாளர் சாந்தி காளிதாஸ், மாணவர் அர்ஷத் ஆகியோரும் பேசுவார்கள். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.