'அழகு நிலாவுடன் கதை நேரம்' என்ற நிகழ்ச்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர் அழகுநிலா, குழந்தைகளுக்காக எழுதிய ‘கொண்டாம்மா கெண்டாமா’, ‘மெர்லயனும் மெலிஸாவும்’, ‘மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும்’ ஆகிய மூன்று படப் புத்தகங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் கதைகளைச் சொல்கையில் மிகுந்த உற்சாகத்துடன் கேட்ட குழந்தைகள்,் பல கேள்விகளையும் எழுப்பினர்.
இந்தக் கதை சொல்லல் நிகழ்வின் வழியாக திருமதி அழகுநிலா சிங்கப்பூர் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தைக் குழந்தைகளிடையே தூண்டினார். மேலும் பல இனக் கலாசார சூழலில் வாழும்போது கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களையும் குழந்தைகள் கற்றுக்கொண்டனர்.
திருமதி அழகுநிலாவின் கதைப் புத்தகங்களிலிருந்து தங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரத்தைத் தேர்வு செய்த குழந்தைகள் அதைச் செயற்கைக் களிமண்ணில் செய்து மகிழ்ந்தனர். தாங்கள் கேட்ட கதைகளை வாசித்து மகிழ, திருமதி அழகுநிலாவின் படப்புத்தகங்களைக் குழந்தைகள் இர–வல் பெற்றனர்.