வாசகர் வட்டத்தின் ஆண்டுவிழா இம்மாதம் 17ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் பவா செல்லதுரை, கவிஞர் தேவதேவன் இருவரும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
சித்ரா ரமேஷின் ‘ஒரு கோப்பை நிலா’ என்ற கவிதை நூல்,
எம்.கே.குமாரின் ‘ஓந்தி’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல், அழகுநிலாவின் ‘பா அங் பாவ்’ என்ற சிறுவர் பாடல்கள் நூல் ஆகியன அதில் வெளியீடு காணும். கவிஞர் தேவதேவனின் சிற்றுரை, பவா செல்லதுரையின் இலக்கியப் பேருரை ஆகியனவும் இடம்பெறும்.
இம்மாதம் 18ஆம் தேதி காலை
10 மணி அளவில் தேசிய நூலகத்தின் பாசிபிலிட்டி அறையில் கவிஞர் தேவதேவனுடன் உரையாடல், கவிதை வாசிப்பு ஆகியன நடைபெறும்.