சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு, தேசிய தினத்தையொட்டி சிங்கப்பூரர்கள், புலம்பெயர்ந்தோர் சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு பூப்பந்து போட்டியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பர் ஜூரோங் சாலையில் உள்ள சிங்கப்பூர் பூப்பந்தாட்ட அரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தியது. மக்கள் கழகத்தின் ஐஎன்சி, ‘ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர்’ நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தன.
சிங்கப்பூரில் வாழும் அனைவரையும் விளையாட்டின் மூலம் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட இப்போட்டியில் பல இனத்தவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். தமிழர் பேரவையின் துணைத்தலைவரும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக்கின் துணைத் தலைவருமான திரு மு.அ.மசூது போட்டியினைத் தொடங்கிவைத்தார்.
வளர்தமிழ் இயக்கத்தின் பொருளாளர் ஜோதி. மாணிக்கவாசகம் வெற்றி பெற்றோருக்குக் கோப்பைகளை வழங்கினார்.
முதல் பரிசை டான் டீன் ராய், வில்லி தேஹ் அணியும், இரண்டாம் பரிசை எரிக் கோஹ் டோங் லுன், தானாவின்அணியும், மூன்றாம் பரிசை இங் ஜியா சுன், ஷான் தே அணியும் நான்காம் பரிசை ஜார்டியன் தியோ வெய் செங், சுவா யீ பின் அணியும் வென்றன.