சிங்கப்பூரின் பதினொரு எழுத்தாளர்கள் இணைந்து வெளி யிடும் 'கதம்பம் 2.0' சிங்கப்பூர்ச் சிறுகதைத் தொகுப்பு இம்மாதம் 25ஆம் தேதி மாலை 6 மணியளவில், விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகம் பாசிபிலிட்டி அறையில் வெளியீடு காண்கிறது.
இந்நூலை எழுத்தாளர் மில்லத் அஹ்மது சிங்கப்பூர் உயிர்மெய் பதிப்பகம் மூலமாக தொகுத்து உள்ளார்.
நிகழ்ச்சியில் முனைவர். எச். சலீம், முனைவர். ந.செல்லக்கிருஷ்ணன், எழுத்தாளர்கள் கமலாதேவி அரவிந்தன், சித்துராஜ் பொன்ராஜ், இமாஜான், இராம.வயிரவன், யூசுப் ராவுத்தர் ரஜித் ஆகியோர் நூல் குறித்துப் பேசுவார்கள்.