ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் தாதிமை இல்லவாசிகளுக்குச் சுவையான பகல் உணவு பரிமாறி அவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினர் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள்.
தீபாவளி தினத்தன்று இந்த நிகழ்வு ‘சன் லவ்’ தாதிமை இல்லத்தில் நடைபெற்றது.
கடந்த பத்து ஆண்டுகளாக தீபாவளியை அந்தத் தாதிமை இல்லத்தில் செலவிட்டு வந்துள்ளார் இந்த சேவையை ஒருங்கிணைத்த விக்னேஷ்வரி ரெத்தினம்.
“இல்லத்தில் எங்களது 11வது தீபாவளிக் கொண்டாட்டம் சமூகத்தின் ஆதரவில் மிகச் சிறப்பாக நடந்தது. இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் சமூகத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்,” என்றார் விக்னேஷ்வரி.
“சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடியதில் எல்லாருக்கும் மனநிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது,” என்றார் விக்னேஷ்வரி.
தீபாவளியுடன் தேசிய நாளையும் இல்லவாசி களுடன் கொண்டாடி வரும் விக்னேஷ்வரி, 2011ஆம் ஆண்டு அந்த இல்லத்தில் மணமுடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்