எழுத்தாளர் பி.கிருஷ்ணன் படைப்புகள் பற்றி கலந்துரையாடல்
உலக இலக்கியத்தை சிங்கப்பூர்த் தமிழர்களிடம் சேர்த்த பி கிருஷ்ணன் இன்று காலை 11.30 - பகல் 1 மணி ஆர்ட்ஸ் ஹவுஸ், கேலரி 2, விழா பாஸ் வேண்டும்
கலாசாரப் பதக்கம் பெற்ற சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளரான பி கிருஷ்ணனின் முன்னைய, புதிய மொழிபெயர்ப்புகளின் மேடைவாசிப்பும் அவரது மொழிபெயர்ப்பு களின் தாக்கம் பற்றிய கலந்துரையாடலும் இந்நிகழ்வில் இடம்பெறுகின்றன. வழக்கறிஞரும் மேடைக் கலைஞருமான வடிவழகன், பொறியாளர் அருள் ஓஸ்வின், மாணவி அஸ்வினி செல்வராஜ், தமிழாசிரியர் ஷேக் அப்துல்லா அப்துல் அர்ஷத் ஆகியோர் நிகழ்ச்சியைப் படைக்கின்றனர்.
தமிழ்க் கவிதையில் பகடி: பயிலரங்கு
நவம்பர் 9, காலை 10.30 - பகல் 1.30 மணி தேசிய கலைக்கூடம், ரூஃப்டாப் ஸ்டூடியோ 3 கட்டணம்: $10
சமூகப் பகடியும் சுய எள்ளலும் தற்காலத் தமிழ்க் கவிதையின் முக்கியக் கூறுகள். புகழ்பெற்ற கவிஞர் இசை இம்மாற்றத் துக்கு வழிகோலிட்டவர்களில் ஒருவர். இந்தப் பயிலரங்கில் கவிஞர் இசை, சமூகக் கவிதைகளில் பகடியை உத்தியாகக் கையாள்வது பற்றி புதிய கவிஞர்களுக்கு வழிகாட்டுவார்.
எளிமையின் ஆளுமை: இசையின் படைப்புவெளி
நவம்பர் 10, பகல் 12.00 - பகல் 1 மணி வரை, ஆர்ட்ஸ் ஹவுஸ், ஸ்கிரீனிங் அறை, விழா பாஸ்
கவிஞர் இசை, தற்கால தமிழ்க் கவிதையின் முக்கியமான ஆளுமை. எளிமையும் சமூக எள்ளலும் நிறைந்த அவரது கவிதைகள் ஒரு புதிய தலைமுறையை கவிதைகளின் பால் ஈர்த்துள்ளது. புனைவு, அபுனைவு, விமர்சனம், உரைகள் என விரியும் தமது படைப்புலகம் பற்றி அவர் பகிர்வார்.
ஒரு மரத்திலிருந்து கிளை பரப்பிச் செல்லும் வெவ்வேறு தமிழ் இலக்கியப் பாதைகள்
நவம்பர் 9ஆம் தேதி, சனி, மாலை 5.30 - 6.30 மணி வரை
தேசிய கலைக்கூடம், ரூஃப்டாப் ஸ்டூடியோ 1-4, விழா பாஸ்
புலம்பெயரும் தமிழ்ச் சமூகங்கள் எதிர்கொள்ளும் புதிய அரசியல், சமூக சூழல்களுக்கு ஏற்ப தமிழ் இலக்கியம் பன்மயத்தன்மைகளுடன் உலகத்தன்மை வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. இந்த அமர்வில், மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி, இந்தியாவின் கவிஞர் இசை, சிங்கப்பூர் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் ஆகியோர் தத்தம் நாடுகளின் தமிழ்ப் படைப்பிலக் கியம் வகுத்துள்ள புதிய பாதைகளையும் வருங்கால சாத்தியங்களையும் பற்றிக் கலந்துரையாடுகின்றனர்.
மேல் விவரங்களுக்கு: https://www.singaporewritersfestival.com/nacswf/nacswf/programme-listin…