சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 200 தமிழ் எழுத்தாளர்களின் விவரங்கள் அடங்கிய ‘சிங்கைத் தமிழ் எழுத்துச் சிற்பிகள் 200’ எனும் நூலை வெளியிட்டிருக்கிறது.
சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகை யில் அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சி களை நடத்தி வருகிறது.
அதையொட்டி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 200 சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் விவரங்கள் அடங்கிய நூலை வெளியிட்டுள்ளது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெளியீட்டு விழாவில் பேசிய இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினருமான திரு. இரா. தின கரன், “இந்த நூல் சிங்கப்பூர் எழுத்தாளர்களைப் பற்றிய பல்வேறு விவரங்கள் அடங்கிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது,” என்று குறிப்பிட்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் இளையர்கள் பங்கேற்ற ஆய்வ ரங்கம் ஒன்றும் இடம்பெற்றது. அதில் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களைப் பற்றிய வரலாறுகளை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
அங் மோ கியோ, பிஷான், செங் காங், பொங்கோல் ஆகிய வட்டாரங்கள் பற்றி வெள்ளி நிலாவும் சாங்கி, தெம்பனிஸ், பாசிர் ரிஸ், பிடோக் ஆகியவை குறித்து ஹர்ஷித்தாவும் புக்கிட் தீமா, கிளமெண்டி, குவீன்ஸ்டவுன், தஞ்சோங் பகார் ஆகிய வட்டா ரங்கள் பற்றி சுப்பு அடைக்கலவனும் வாம்போ, காலாங், கேலாங், தோ பாயோ ஆகியவை குறித்து கல்யா ணியும் கட்டுரைகள் படைத்தனர்.
ஷர்மிலி லிட்டில் இந்தியா உள்ளிட்ட சிராங்கூன், ஹவ்காங் ஆகியவை பற்றியும் ஹரிணி மத்திய வர்த்தக வட்டாரம், மரீன் பரேட், புக்கிட் மேரா ஆகிய வட்டாரங்கள் பற்றியும் ரேவதி ஜூரோங், சுவா சு காங், புக்கிட் பாஞ்சாங், புக்கிட் பாத்தோக் ஆகிய வட்டாரங்கள் குறித்தும் கட்டுரைகள் படைத்தனர்.
தொடர்ந்து செ. ப. பன்னீர்செல்வம் தலைமையில் கலந்துரையாடலும் கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றன.
ஆய்வரங்கை நிறைவுசெய்து பேசிய எழுத்தாளர் கழகத்தின் துணைத் தலைவரும் இவ்விரு திட்டங்களுக்கும் பொறுப்பு வகித்தவருமான நா. ஆண்டியப்பன் இந்த ஆய்வுகள் முழுமையானவை அல்ல என்றும் இவை தொடக்கம்தான் என்றும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வட்டாரத்தைப் பற்றியும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சமூகத்தின் உதவியுடன் முழு விவரங்கள் அடங்கிய நூல் பின்னர் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
செய்தி: எழுத்தாளர் கழகம்