'சிங்கப்பூரில் இருப்பதே சிறந்தது'

1 mins read
bd528ba2-694e-48c5-be88-0639443074b0
ஊர­டங்கு கார­ண­மாக ஸ்பெ­யி­னில் சிக்­கித் தவித்த திரு லலித் குமார் கணேஷ், 30 (படம்), நாடு திரும்ப அங்­குள்ள சிங்­கப்­பூர் தூத­ர­கம் கை கொடுத்­தது. -

ஊர­டங்கு கார­ண­மாக ஸ்பெ­யி­னில் சிக்­கித் தவித்த திரு லலித் குமார் கணேஷ், 30 (படம்), நாடு திரும்ப அங்­குள்ள சிங்­கப்­பூர் தூத­ர­கம் கை கொடுத்­தது. கடந்த மாதம் 25ஆம் தேதி இவர் சிங்­கப்­பூர் திரும்­பி­ய­போ­தும் நேராக வீட்­டிற்­குச் செல்ல முடி­ய­வில்லை. வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ர­வின்­கீழ் 14 நாட்­களுக்கு இவர் கிராண்ட் பார்க் ஹோட்­ட­லி­லேயே முடங்கினார்.

வெலன்­சி­யா­வில் உள்ள பெர்க்லி இசைக் கல்­லூ­ரி­யில் முது­க­லைப் பட்­டம் பயின்று வரு­ம் திரு லலித், "உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­பட்­டா­லும் பர­வா­யில்லை, சிங்­கப்­பூ­ரில் இருப்­பதே சிறந்­தது," என்­கி­றார்.

ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருந்­த­போதும் மடிக்­க­ணி­னி­மூ­லம் இவர் தொடர்ந்து வகுப்­பு­களில் பங்­கேற்­றார்; திட்­டப்­ப­ணி­களை மேற்­கொண்­டார். இருந்­த­போ­தும் ஸ்பெ­யி­னில் இருந்து தம் நண்­பர்­களும் இங்­குள்ள தம் அன்­புக்கு உரி­ய­வர்­களும் மன­ரீ­தி­யாக ஆத­ரவு அளித்­த­தாக திரு லலித் நெகிழ்ச்­சி­யு­டன் சொன்­னார்.

"எதிர்­மறை எண்­ணங்­க­ளைக் கைவிட்டு, சூழ­லுக்கேற்ப மனத்தை மாற்­றிக்­கொள்­வது அவ­சி­யம். நம்மை நாமே புத்­தாக்­க­மான முறை­யில் மாற்­றிக்­கொள்ள இந்த இரு வார காலம் நல்ல வாய்ப்­ப­ளித்­தது," என்­றார் திரு லலித்.