தன்னம்பிக்கையூட்டும் இலக்கியக் காணொளிகள்

தன்னம்பிக்கையூட்டும் இலக்கியக் காணொளிகள்

1 mins read
5a33fa23-f571-4014-bb54-c9c9a701c88a
(இடமிருந்து) கவிஞர்கள் அறிவுமதி, சினேகன், தங்கம் மூர்த்தி போன்றோரின் படைப்புகள் 'கவிமாலை' அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. படங்கள்: இணையம் -

கொரோனா கிருமி உலகையே அச்­சு­றுத்தி வரும் வேளை­யில், அதை மன­வ­லி­மை­யு­டன் எதிர்­கொள்ள வேண்­டும் என்ற சிந்­தனை 'கவி­மாலை' எனும் சிங்­கப்­பூர்த் தமிழ்க் கவி­ஞர்­க­ளின் அமைப்பு உறுப்­பி­னர்­க­ளி­டையே மேலோங்கி இருந்­தது.

உல­கெங்­கு­முள்ள தமிழ்க் கவி­ஞர்­க­ள் மூலமாக மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஊட்­ட­லாம் என்ற எண்­ணத்­து­டன் அந்த அமைப்­பி­னர் செய­லில் இறங்­கி­னர். அந்த எண்­ணத்­தில் பிறந்­தது 'வல்­லமை தாராயோ!' எனும் இலக்­கிய ஆளு­மை­க­ளின் காணொ­ளித் தொடர்.

"மக்­கள் இழப்­பி­லும் சோர்­விலும் தவிக்­கும் நேரத்­தில் தொலை­வி­லி­ருந்து தமி­ழால் அர­வ­ணைப்­போம் என்ற நோக்­கத்­தில் இத்­தொ­டரை உரு­வாக்­கி­னோம்," என்றார் 'கவி­மாலை' அமைப்­பின் தலை­வ­ரான கவி­ஞர் இன்பா.

அந்த அமைப்­பின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பிர­பல உள்­ளூர், வெளி­நாட்­டுக் கவி­ஞர்­க­ளின் பிடித்த, ஊக்­க­மூட்­டும் கவிதைப் படைப்பு­களும் உரை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. இது­வரை இந்தக் கா­ணொ­ளித் தொட­ரில் பிர­பல கவி­ஞர்­க­ளான அறி­வு­மதி, சினேகன், தங்­கம் மூர்த்தி போன்­ற­வர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர்.

கொரோனா கிரு­மித்­தொற்று போராட்­டம் தொடர்­பில் நேர்­ம­றை­யான எண்­ணங்­க­ளைத் தூண்­டும் இப்­ப­டைப்­பு­கள் ஒவ்­வொன்­றும் சுருக்­க­மான நடை­யில் எடுக்­கப்­பட்­டவை.

இலங்கை, அமெ­ரிக்­கா­வில் வாழும் தமிழ்க் கவி­ஞர்­களும் இத்­தொ­ட­ரில் இடம்­பெ­று­வர் என்று தெரி­வித்த கவி­ஞர் இன்பா, கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­யடிப்பு அதி­ர­டித் திட்­டம் முடி­யும் வரை­யி­லா­வது இத்­தொ­டர் நீடிக்­கும் எனக் குறிப்­பிட்­டார்.