மறைந்த பிரபல திரைப்படப் பின்னணி பாடகரும் நடிகருமான ‘கலைமாமணி’ மலேசியா வாசு தேவனை நினைவுகூரும்விதமாக, அவரது 75வது பிறந்தநாளான நாளை 15ஆம் தேதி யூடியூப் வழி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அவருடைய மகன் யுகேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.
சிங்கப்பூர் நேரப்படி மாலை 6.30 மணிக்குப் பத்து நாடுகளைச் சேர்ந்த வானொலி படைப்பாளர்கள் அமரர் வாசுதேவனுக்கு மரியாதை செலுத்துவர். இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சிக்குப் பின் சிங்கப்பூர், மலேசியப் பாடகர்கள் இணைந்து, திரு வாசுதேவனின் பாடல்களில் தங்களுக்குப் பிடித்தமானவற்றைப் பாடி, அவருக்கு மரியாதை செலுத்துவர்.
இரவு 9.30 மணிக்கு தமிழ்த் திரையுலக பின்னணிப் பாடகர்கள் பலர் பங்கேற்கும் இரண்டு மணி நேர நேரடி இசை நிகழ்ச்சி இடம்பெறும். அதைத் தொடர்ந்து, திரு வாசுதேவனுடனான தங்களின் அனுபவங்கள் குறித்து தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பகிர்ந்துகொள்வர்.
இவையனைத்தையும் https:///www.youtube.com/yugendran vasudevan எனும் யூடியூப் ஒளிவழி மூலம் கண்டு ரசிக்கலாம்.