இவ்வாண்டின் ‘அதிபர் சவால்’ அறப்பணி நிகழ்ச்சிக்காக சிங்கப்பூரில் உள்ள 11 இந்துக் கோயில்களும் இந்து அறக்கட்டளை வாரியமும் இணைந்து $85,000 நன்கொடையை வழங்கியுள்ளன.
ஸ்ரீ வீரமாகாளியம்மன், ஸ்ரீ சிவதுர்கா, ஸ்ரீ முனீஸ்வரன், ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர், ஸ்ரீ ருத்ர காளியம்மன், ஸ்ரீ செண்பக விநாயகர், ஸ்ரீ தர்ம முனீஸ்வரன், ஸ்ரீ மகா மாரியம்மன், அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர், ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆகிய கோயில்கள், செட்டியார் கோயில் குழுமத்தின்கீழ் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில், இந்து அறக்கட்டளை வாரியத்தின்கீழ் உள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீ சிவன், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆகிய கோயில்கள் இணைந்து நன்கொடையை வழங்கின. நன்கொடைக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இம்மாதம் 3ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற தீபாவளி ஒளியூட்டு விழாவின்போது இடம்பெற்றது. ஒளியூட்டு விழாவில் பங்கேற்ற துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், ‘அதிபர் சவால் நன்கொடை’யின் சார்பில் காசோலையைப் பெற்றுக்கொண்டார்.