கற்பித்தலில் புதிய பாணி: பாராட்டப்படும் ஆங்கில ஆசிரியர்கள்

கற்பித்தலில் புதிய பாணி: பாராட்டப்படும் ஆங்கில ஆசிரியர்கள்

2 mins read
92e58ecd-72df-47f7-bc47-08f47956858e
திருவாட்டி சுஜாதா பரமதயாளன். -
multi-img1 of 2

மாண­வர்­க­ளி­டம் கற்க வேண்­டும்­ என்ற ஆர்­வத்­தைத் தூண்­டி­வி­டக்­கூ­டிய வகையில் கற்­பித்தலில் புத்­தாக்க அணு­கு­மு­றை­களைக் கையா­ளும் ஆங்­கில ஆசி­ரி­யர்­களுக்­கான கல்வி அமைச்­சின் விருதை இந்த ஆண்டு நால்வர் பெற்றுள்ளனர்.

அவர்­களில் செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிலை­யத்­தில் ஆங்­கி­ல­மும் மெய்­யி­ய­லும் கற்­றுத்­த­ரும் ஆசிரி­யர் கார்த்திகேயன் கோவிந்­த­ராஜனும், 34, ஒரு­வர்.

செயின்ட் ஆண்ட்ரூஸ் உயர்­நிலைப்­பள்ளி­யில் 17 ஆண்­டு­க­ளா­கப் பணி­யாற்­றும் திரு­வாட்டி சுஜாதா பர­ம­த­யா­ளன் விருதை வென்றுள்ள மற்­றொ­ரு­வர்.

அள­விட முடி­யாத மனித உணர்வு­களை இனம் கண்டு, அவற்றுக்கு உரு கொடுப்­பது மொழி என்­ப­தால் பிற­ருக்கு மொழி­யாற்­றலை வளர்க்­கும் பணி­யில் ஈடு­பட விரும்­பு­வ­தாகக் கூறும் திரு கார்த்தி­கே­யன், தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஆங்­கில இலக்­கி­யத் துறை­யில் இளங்­க­லைப் பட்­டம் பெற்­ற­வர்.

பின்­னர் பிரிட்­ட­னின் லீட்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஆங்­கில இலக்­கி­யம், பிரிட்­டிஷ் கொலம்­பியா­வில் கற்­பித்­தல் துறை­யில் முது­கலைக் கல்வி ஆகி­ய­வற்­றைப் பயின்று, பின்­னர் தேசிய கல்வி நிலை­யத்­தில் கல்­விக்­கான முது­நிலை பட்­ட­யப்­ப­டிப்பை முடித்­தார். ஆங்­கில மொழி மட்­டு­மின்றி தமிழ் மற்­றும் இந்­தி­யர்­கள் தொடர்­பு­டைய பல்­வேறு தலைப்­பு­க­ளி­லான ஆய்­வுக் கட்­டு­ரை­களை எழு­தி­யி­ருக்­கிறார்.

"கன­வு­களை நன­வாக்க முயலும் இளை­யர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்து பணி செய்­யும் உறு­தி­யும் ஆர்­வ­மும் ஆசி­யர்­க­ளுக்கு இருக்­க­வேண்­டும். கற்­பித்­த­லின் தரத்­தைக் கட்­டிக்­காக்­கும் அதே நேரத்­தில் வகுப்­பு­க­ளைச் சுவாரசியமாக்­க­வேண்­டும்," என்­று இவர் கூறுகி­றார்.

வகுப்­ப­றை­யைத் தாண்­டிய உண்மை உல­கச் சூழ­லில் மாண­வர்­க­ளுக்­குத் தேவைப்­படும் பயனுள்ள பல­வற்­றை­யும் கற்­பிக்­கும் திரு­வாட்டி சுஜாதா, தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தில் ஆங்­கில மொழி மற்­றும் ஆங்­கில இலக்­கி­யத்­தில் இளங்­கலை பட்­டம் பெற்­ற­வர்.

ஆசி­ரி­யர்­க­ளும் தொடர்ந்து நிறைய நூல்­க­ளைப் படிக்­க­வேண்­டும். படித்­த­தன் வழி­யாக ஏற்­படக் கூடிய சிந்­த­னை­களை வகுப்­பில் மாண­வர்­க­ளு­டன் பகிர்ந்து அவர்­களது ஆர்­வத்­தைத் தூண்­ட­வேண்­டும்," என்று இவர் தெரி­வித்­தார்.

"மாண­வர்­க­ளின் கருத்­தை­யும் கேட்­ட­றிந்து தேவைப்­ப­டும்­போது என் அணு­கு­மு­றையை மாற்­றிக்­கொள்­வேன்," என்­றார் இவர்.

இந்த விரு­தைப் பெற்­றது தொடர்­பில் பேரு­வகை அடை­வ­தாகக் கூறும் இந்த ஆசி­ரி­யர்­கள், எதைப் படித்­தா­லும் அதனை ஆரா­யும்­படி மாண­வர்­க­ளுக்கு ஆலோசனை தெரி­வித்­த­னர்.

செய்தி: கி. ஜனார்த்தனன்