தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியங்கள்

2 mins read
d991d6b0-dbbc-4c0b-b6bc-5b499c479c57
பயிற்சி வகுப்பில் திருவாட்டி சித்ரலேகா (இடம்). படம்: ஹூஸ் -

இந்து இளங்­கோ­வன்

தஞ்­சா­வூர் ஓவி­யம் தனித்­து­வம் வாய்ந்த ஒன்று. கடந்த நூற்­றாண்­டு­களில் தெய்­வங்­க­ளின் உரு­வங்­களை வரை­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட இந்த ஓவிய முறை, மக்­கள் வரைந்து மகி­ழும் ஒன்­றாக தற்­காலத்­தில் உரு­வெ­டுத்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் இக்­க­லையை சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழ­கம் கற்­றுக்­கொ­டுத்து வந்­தது. அங்கு கற்று வந்த திரு­வாட்டி சித்­ர­லேகா குமார், 2016ஆம் ஆண்டு சுய­மாக ஹூஸ் (Hues) என்ற தஞ்­சா­வூர் ஓவி­யக் கலைப் பள்ளி ஒன்­றைத் தொடங்­கி­னார்.

மூன்று மாண­வர்­க­ளு­டன் தொடங்­கப்­பட்ட இப்­பள்­ளி­யில் இப்­போது 9 வய­தி­லி­ருந்து 70 வயது வரை 100க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் உள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் நாம் அதி­கம் பார்த்­தி­ராத, கேள்­விப்­பட்­டி­ராத இந்த ஓவி­யங்­கள், 'வைப­வம்' என்­னும் கண்­காட்­சி­யில் மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

கலை­ஞர்­கள் தங்­க­ளது ஓவி­யத் திறனை வெளிப்­ப­டுத்­தும் ஒரு நல்ல தளத்தை வழங்­கு­வதே இந்­தப் பிரத்தி­யேக தஞ்­சா­வூர் ஓவி­யக் கண்­காட்­சி­யின் நோக்­க­மா­கும்.

தஞ்­சா­வூர் ஓவி­யம் பார்ப்­ப­தற்கு எளி­மை­யா­ன­தாக இருந்­தா­லும் அதன் செயல்­மு­றை­யும் வேலைப்­பா­டும் மிக நுணுக்­க­மான ஒன்று. ஓர் ஓவி­யப் படைப்பை உரு­வாக்கு­வதற்­குச் சில வாரங்­க­ளி­லி­ருந்து ஓர் ஆண்டு வரை ஆக­லாம். கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே இந்த மறக்­கப்­பட்ட கலை ஒரு மறு­ம­லர்ச்­சி­யைப் பெற்று வரு­கிறது.

தென்­னிந்­திய பாரம்­ப­ரிய கலை­களுக்­கி­டையே மதிப்­பிற்­கு­ரிய கலை­யாக இது பெயர் பதித்­துள்­ளது என்­கி­றார் திரு­வாட்டி சித்­ர­லேகா.

'வைப­வம்' ஓவி­யக் கண்­காட்சி வரும் வெள்­ளிக்­கி­ழமை, மார்ச் 26ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 'விஷு­வல் ஆர்ட்ஸ்' (Visual Arts) மையத்­தில் நடை­பெ­றும். கண்­காட்­சி­யில் 'ஹூஸ்' பள்­ளி­யின் 34 மாண­வர்­கள் உரு­வாக்­கிய 75 ஓவி­யப் படைப்­பு­கள் பார்­வைக்கு வைக்­கப்­படும்.