நேர-லை-யில் கவி-தை-களை உட-னுக்-கு-டன் பாடி சாத-னை

நேர-லை-யில் கவி-தை-களை உட-னுக்-கு-டன் பாடி சாத-னை

2 mins read
5ab1aafb-fba8-4a9d-b6d8-358ed027d406
பாராட்டு நிகழ்ச்சியில் சாதனைக்கு உறுதுணையாக இருந்தவர்களுடன் கவிஞர் க.து.மு. இக்பால் (வலமிருந்து 3வது). படம்: ஜாகுர் உசேன் -

கி. ஜனார்த்­த­னன்

சிங்­கப்­பூர் கவி­ஞர்­கள் சமர்ப்­பித்து உள்ள தமிழ்க்­க­வி­தை­கள், ஆசிய சாத­னைப் பதிவு புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளன. கவிதை வரி­க­ளைப் பாட­லாக்­கும் அரிய சாத­னை­யில் கவி­தை­கள் அங்­கம் வகித்­துள்­ளன.

சிங்­கப்­பூர், மலே­சியா, இந்­தியா, இலங்கை ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­தோ­ரி­ட­மி­ருந்து மொத்­தம் முப்­பத்து மூன்று கவி­தை­கள், கடந்­தாண்டு டிசம்­பர் 27ஆம் தேதி­யன்று பஹ்­ரே­னி­லுள்ள மனாமா நக­ரைச் சேர்ந்த இசைக்­க­லை­ஞர் பால் முகம்­ம­து­வி­டம் நேர­லை­யாக வழங்­கப்­பட்­டன. ஒவ்­வொரு கவி­தை­யை­யும் உட­னுக்­கு­டன் பெற்­றுக்­கொண்டு தொடர்ச்­சி­யாக கீதங்­கள் உரு­வாக்­கித் தாமே இசை­ய­மைத்­துப் பாடி­னார் 61 வயது திரு பால்.

இவர் மூன்று மணி நேரம் தொடர்ச்­சி­யா­கப் பாடல்­கள் உரு­வாக்­கிய நிகழ்வு, ஜன­வரி 4ஆம் தேதி­யன்று ஆசிய சாதனை புத்­த­கத்­தில் பதிவு செய்­யப்­பட்­டது.

"திரு பாலின் இசை­ய­மைப்பு எனக்­குப் பெரு­ம­ள­வில் மனத்­திருப்­தியை அளித்­தது," என்று சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து கவிதை ஒன்றை அனுப்­பிய வர்­த்த­கர் மதி­ய­ழ­கன் இசைக்­கவி, 54, தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து கவி­தையை அனுப்­பிய மற்­றொ­ரு­வ­ரான பகு­தி­நேர ஆசி­ரி­யர் அன்­ன­லட்­சுமி குப்பு­சாமி, 64, தம் தந்­தை­யைப் பற்­றிய அந்­தக் கவி­தைக்கு திரு பாலின் இசை­ய­மைப்பு மேலும் உயிர் சேர்த்­த­தா­கத் தெரி­வித்­தார்.

"என் கவி­தைக்­குள் பொதிந்­தி­ருந்த உணர்­வு­களை இவர் சிறப்­பாக வெளிக்­கொண்டு வந்­தார்," என்று அவர் தெரி­வித்­தார்.

மனாமா நக­ரி­லுள்ள அனைத்­து­லக இந்­தி­யப் பள்­ளி­யில் கிட்­டத்­தட்ட 26 ஆண்­டு­க­ளா­கப் பணி­பு­ரிந்த இசை ஆசி­ரி­யர், இந்­தச் சாத­னை­யைப் படைத்­த­தில் பேரு­வகை அடை­வ­தா­கக் கூறி­னார்.

"ஒரே இடத்­தில் இருந்­த­வாறு வேக­வே­க­மாக கவி­தை­க­ளுக்கு இசை­ய­மைத்து, அவற்­றைப் பாடி கரு­வி­களை வாசித்­தது, உற்­சா­கம் கொடுத்­தது," என்­றார்.

திரு பாலின் சாத­னை­யைத் தகுந்த சோத­னை­க­ளு­டன் உறுதி செய்­த­தாக ஆசிய சாத­னைப் புத்­த­கக் குழு புது­டெல்­லி­யி­லி­ருந்து தமிழ் முர­சுக்­குத் தெரி­வித்­தது.

நிகழ்ச்­சியை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஏற்­பாடு செய்து இயக்­கிய எழுத்­தா­ள­ரும் குறும்­ப­டத் தயா­ரிப்­பா­ள­ரு­மான மில்­லத் அக­மது, கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் துவண்­டு­போ­ன கவி­ஞர்­களுக்கு ஊக்­க­ம­ளிக்க இதற்கு ஏற்­பாடு செய்­த­தா­கத் தெரி­வித்­தார்.

"சாதனை முயற்­சிக்­காக இவ்­வாறு உல­கத் தமி­ழர்­களை ஒன்று­தி­ரட்­டு­வது நல்­லது என நினைத்­தேன்," என்று அவர் கூறி­னார்.

பங்­கேற்­பா­ளர்­கள் முன்­வந்து கொடுத்த கவி­தை­க­ளின் எண்­ணிக்கை எதிர்­பார்த்­த­தை­விட அதி­க­மாக இருந்­த­தா­க­வும் நிகழ்ச்சி­யின் இணை ஏற்­பாட்­டா­ள­ரான மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநி­லத்­தி­லுள்ள இயல் பதிப்­ப­கத்­தின் நிறு­வ­னர் திரு­வாட்டி பொன் கோகி­லம் தெரி­வித்­தார். மார்ச் 8ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த பங்­கேற்­பா­ளர்­க­ளுக்­கும் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் நடத்­தப்­பட்ட பாராட்டு நிகழ்ச்­சி­யில் கவி­ஞர் க.து.மு இக்­பால் பங்­கேற்­றார்.