தன்முனைப்புச் சொற்பொழிவு: கொரோனாவை மறப்போம்! வெற்றிக் கதவைத் திறப்போம்!

தன்முனைப்புச் சொற்பொழிவு: கொரோனாவை மறப்போம்! வெற்றிக் கதவைத் திறப்போம்!

1 mins read

ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்க (சிங்­கப்­பூர் கிளை) ஏற்­பாட்­டில், இம்­மா­தம் 7ஆம் தேதி­யன்று இணை­யம் வழி­யாக 'கொரோ­னாவை மறப்­போம்! வெற்­றிக் கத­வைத் திறப்­போம்!' என்ற தலைப்­பில் தமி­ழ­கத்­தின் புகழ்­பெற்ற பேச்­சா­ளர் கவி­ஞர் திரு தங்­கம் மூர்த்தி, தன்­மு­னைப்­புச் சொற்­பொ­ழிவு ஆற்­றி­னார்.

புத்­தாக்­கச் சிந்­தனை, விடா­முயற்சி ஆகி­ய­வற்­று­டன் செயல்­படும் அதே­வே­ளை­யில் ஒரு­வ­ரை­ஒரு­வர் புரிந்­து­கொண்டு 'நான்' என்ற நிலை­யி­லி­ருந்து 'நாம்' எனும் நிலைக்­குச் செல்­வ­தன் மூலம் வெற்­றிக் கத­வு­க­ளைத் திறக்க முடி­யும் என்று நகைச்­சு­வை­யும் கவிச்­சு­வை­யும் கலந்து சிறப்­பு­ரை­யாற்­றி­னார். சங்­கத்­தின் தலை­வர் பட்­ட­யக் கணக்­காய்­வா­ளர் முனை­வர் மு. அ. காதர் வர­வேற்­புரை வழங்­கி­னார்.

அண்­மை­யில் இயற்கை எய்­திய ஜமால் முஹம்­மது கல்­லூ­ரி­யின் மேனாள் முதல்­வர் முனை­வர் முஹம்­மது சாலிஹ் ஆற்­றிய கல்­விப் பணி­களை நினை­வு­கூ­ரும் அங்­கத்­து­டன் நிகழ்ச்சி தொடங்­கி­யது.

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் தலை­வர் அமரர் திரு சுப. அரு­ணாச்­ச­லம் ஆற்­றிய தமிழ்ப் பணி­க­ளை­யும் நினை­வு­கூர்ந்து இரு­வ­ரது ஆத்­ம­சாந்­திக்கு ஒரு நிமிட மௌன அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

பொது­மக்­க­ளு­டன் சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு சமூக அமைப்­பு­க­ளின் தலை­வர்­களும் சங்­கத்­தின் உறுப்­பி­னர்­களும் இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்து­கொண்­ட­னர்.