சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா நடைபெற உள்ளது. வரும் 17ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு 'ஸூம்' வழி நடைபெறும்.
செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சின் குழுவின் தலைவருமான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். சிறந்த தன்முனைப்பு மற்றும் இலக்கியப் பேச்சாளரும் தமிழ்நாடு மாவட்டக் காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளருமான திரு அ.கலியமூர்த்தி ஐ.பி.எஸ். 'கரையற்ற கல்வியும் வரையற்ற மொழியும்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுவார். இவ்வாண்டும் வழக்கம்போல் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படும். அத்துடன் மாணவர் போட்டிகளின் வெற்றியாளர்கள் பெயர்களும் பொதுமக்களுக்கான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெயர்களும் அறிவிக்கப்படும். Meeting ID: 880 0007 5894