டாக்டர் பர்வீன் சுல்தானா உரையுடன் வலம்வந்த 'இளையரே எழுக இன்தமிழ் சிறக்க'

டாக்டர் பர்வீன் சுல்தானா உரையுடன் வலம்வந்த 'இளையரே எழுக இன்தமிழ் சிறக்க'

2 mins read
99b5facb-bf50-4d86-a34f-d553ee6eb27e
பங்கேற்பாளர்களுடன் உரையாடும் டாக்டர் பர்வீன் சுல்தானா (வலக்கோடி நடுப்படம்). -

சிங்­கப்­பூர் தமி­ழர் இயக்­கம், இவ்­வாண்­டின் தமிழ் மொழி விழாவை முன்­னிட்டு 'இளை­யரே எழுக இன்­த­மிழ் சிறக்க' என்ற நிகழ்ச்­சிக்­குக் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

கடந்த 67 ஆண்­டு­க­ளாக இயங்கி வரும் இந்த இயக்­கம், மாதந்­தோ­றும் நிகழ்ச்­சி­களை நடத்தி வரு­வ­தாக அதன் தலை­வர் திரு ரெ.செல்­வ­ராஜு தமது நிகழ்ச்­சி­யின் தொடக்க உரை­யில் தெரி­வித்­தார். இவ்­வாண்டு வெவ்­வேறு நிலை­களில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு வெவ்­வேறு நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன.

பாலர் பள்ளி நிலைக்­குக் கதை விளக்­கம் கூறு­தல், தொடக்­க­நிலை 1 மற்­றும் 2க்கு திருக்­கு­றளை ஒட்­டிக் கதை கூறு­தல், தொடக்­க­நிலை 3, 4 மாண­வர்­க­ளுக்­குப் பேச்­சுப் போட்டி ஆகிய அங்­கங்­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டன.

தொடக்­க­நிலை 5 மற்­றும் 6 மாண­வர்­கள், தங்­கள் பெற்­றோ­ரு­டன் பங்­கேற்­கும் வகை­யில் போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட 165 மாண­வர்­கள் போட்­டி­களில் பங்­கேற்­ற­னர். இவர்­களில் 22 பேருக்கு வெற்­றி­யா­ளர் பரி­சும் இதர பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு ஊக்கப் பரி­சும் வழங்­கப்­பட்­டன. முன்­ப­திவு செய்­யப்­பட்ட காணொ­ளி­களில் வெற்­றி­யா­ளர்­க­ளின் காணொ­ளி­கள் நிகழ்ச்­சி­யின்­போது இடம்­பெற்­றன.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் திரு மனோ­க­ரன், சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு ரா. அன்­ப­ரசு, இந்­தி­யா­வி­லி­ருந்து சிறப்­புரை ஆற்­றிய திரு­மதி பர்­வீன் சுல்­தானா உள்­ளிட்­டோர் இந்த நிகழ்ச்­சி­யில் இணைந்­தி­ருந்­த­னர்.

டாக்­டர் பர்­வீன் சுல்­தானா, தமது உரை மூலம் மாண­வர்­க­ளுக்­கி­டையே கலந்­து­ரை­யா­டல் அங்­கத்­தைத் தொடங்கி வைத்­தார்.

"உல­கத்­தில் நான் சென்று பார்த்த அத்­தனை நாடு­களிலும் சிங்­கப்­பூர் மண் மிகச் சிறப்பு பெற்ற மண்­ணாக இருக்­கிறது.

"வேறு நாடு­களில் தமிழை முன்­னெ­டுக்­கச் செய்­யும் இயக்­கங்­கள் உண்டு என்­றா­லும் சிங்­கப்­பூ­ரின் அணு­கு­முறை மிக நுட்­ப­மா­னது. கல்வி புலத்­தி­லும் அறிவு புலத்­தி­லும் உணர்வு ரீதி­யி­லும் எப்­படி எந்­தக் கட்­ட­மை­வில் எடுத்­துச் செல்­ல­வேண்­டும் என்­ப­தில் மிக நுட்­ப­மான முறை­யைக் கையாள்­வ­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் முன்­னிற்­கின்­ற­னர்," என்று அவர் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

கலந்­து­ரை­யா­டல் அங்­கத்­தில் மாண­வர்­கள் தங்­க­ளின் கருத்­து­க­ளை டாக்டர் பர்வீனுடன் பகிர்ந்து பய­ன­டைந்­த­னர்.

செய்தி: கி. ஜனார்த்­த­னன்