சிறுகதையின் உருவாக்கம்

சிறுகதையின் உருவாக்கம்

2 mins read
684d01e7-b4ea-412d-9e95-9a4d41913be3
மெய்நிகர் காட்சி வழியாக நிகழ்ச்சி நடைபெற்றது. படம்: சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் -

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

சிறுகதையை எழுத அதி­கம் சிந்­திக்க வேண்­டும், ஈர்ப்பு குறை­யா­மல் வாச­கர் மனதை வசப் ­படுத்­த­வும் வேண்­டும்.

இதையொட்டி தமிழ்முரசு நாளி­தழை தோன்­று­வித்த தமி­ழ­வேள் கோ சாரங்­க­பா­ணி­யின் நினைவு சொற்­பொ­ழி­வுக்கு சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் ஏற்­பா­டு செய்­தி­ருந்­தது.

'தமிழ் மொழி விழாவை முன்­னிட்டு, 'ஸும்' மெய்­நி­கர் தளத்­தில் 'தமிழ் கற்­பித்­த­லில் சிறு­கதை படிப்­பும் படைப்­பும்' எனும் தலைப்­பி­லான இச்­சொற்­பொ­ழிவு கடந்த 10ஆம் தேதி நடந்­தது.

இதில் தமிழ் ஆசி­ரி­யர்­கள் சிறு­க­தை­க­ளைப் பற்றி இன்­னும் ஆழ­மாக அறிந்து, அவற்றைத் படைப்­பாற்­றல் வழி மாண­வர்­க­ளி­டம் கொண்டு போய் சேர்க்­கும் உத்­தி­கள் குறித்து தெரிந்­து­கொண்­ட­னர்.

சுமார் 200 பேர் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்ச்­சி­யில் பிர­பல நகைச்­சு­வை பேச்­சா­ள­ரும் 'கலை­மா­மணி' புகழ் தமிழ்த் துறை பேரா­சி­ரி­ய­ரு­மான முனை­வர் கு. ஞான­சம்­பந்­தன் சொற்­பொழிவு ஆற்­றி­னார்.

மாண­வர்­க­ளுக்கு கற்­பிக்கும் முன், அவர்­கள் விரும்­பு­கின்ற செய்­தி­களை அவர்­க­ளது பாணி­யி­லேயே பேசிப் பழ­கிக்­கொள்ள ஊக்­கு­விக்­கும் திரு கு. ஞான ­சம்­பந்­தன், கதை சொல்லப் பழக வேண்­டும் என்­றார். மேலும், கதை சொல்­ப­வ­ரின் குரல் வலி­மை­யும் கதையை காட்­சி­ப­டுத்­து­கின்ற வித­மும் மன­தில் பதி­வ­தற்கு உத­வும்.

சிறு­க­தை­யின் தொடக்­கம் சுவா­ர­சி­ய­மாக தொடங்­கு­வ­தும் முக்­கி­ய­மாம்.

'புதுமைப்பித்­தன்' எழு­திய நூல்­கள் அமரத்­து­வம் பெற்­றவை என்­றும் அவர் எழு­திய 'கட­வு­ளும் கந்­த­சா­மிப்பிள்­ளை­யும்' போன்ற நூல்­களை வாசித்­துக் கேட்க வேண்டு­மென்­றும் பரிந்து­ரைத்­தார்.

ஒரு நல்ல சிறு­கதை எப்­படி இருக்க வேண்­டும் என்ற கேள்­விக்கு பதி­ல­ளித்த அவர், அது படித்த முடித்த பிற­கும் நினை­வில் இருக்க வேண்­டும் என்­றார்.

கதை எழு­து­ம் மாண­வர்­க­ளின் கற்­பனைத் திறனை அதிகரிக்க ஆசி­ரி­யர்­கள் மாண­வர்­களை வகுப்­ப­றைக்கு அப்­பா­ல் வெளிப்­புற நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டுத்­த வேண்டும் என்று திரு கு.ஞான­சம்­பந்­தன் வலியுறுத்தினார்.

"ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் அதி­கம் வாசிக்கும்போது படைப்­பாற்­றல் இயல்­பாக வந்து சேரும். அவ்­வாறே படைப்­பாற்­றலை இளைய தலை­மு­றை­யி­ன­ரி­டம் கொண்டு சேர்க்­கும்­போது தமிழ் மொழி வாழும் மொழி­யாக நிலைத்­தி­ருக்­கும்," என்று கூறி­னார் சிங்­கப்­பூர்த் தமிழா­சி­ரி­யர் சங்­கத்­தின் தலை­வர் திரு தனபால் குமார்.