ஈகைத் திருநாளை முன்னிட்டு 500 குடும்பங்களுக்கு உதவிக்கரம்

ஈகைத் திருநாளை முன்னிட்டு 500 குடும்பங்களுக்கு உதவிக்கரம்

1 mins read
6dc13d00-7e1f-45a1-aba5-2ea1ae4e7c02
குறைந்த வருமானக் குடும்பங்களின் வீடுகளுக்குத் தொண்டூழியர்கள் சென்று உதவி வழங்கினர். செய்தி, படம்: அ. முகம்மது பிலால் -

நோன்­புப் பெரு­நாளை முன்­னிட்டு குறைந்த வரு­மானக் குடும்­பங்­களுக்கு உத­வும் வகை­யில் ஆத­ர­வா­ளர் வழங்­கிய பணம், ஐக்­கிய இந்­திய முஸ்­லிம் சங்­கம் வழங்­கிய அரிசி மற்­றும் மளி­கைப் பொருட்­களை இந்­திய முஸ்­லிம் பேரவை வழங்கியது.

சிண்டா ஆண்­டு­தோ­றும் வழங்­கும் பண்­டி­கைக் கால அன்­ப­ளிப்பு, 'பிஸ்மி இஸ்­லா­மிய வானொலி' வழங்­கிய ரொக்­கம் இரண்­டை­யும் மொத்­தம் 120 குடும்­பங்­க­ளுக்­குக் கடந்த இரு வாரங்­க­ளாக அவர்­களது இல்­லத்­திற்கே தொண்­டூ­ழி­யர்­கள் சென்று கொடுத்­த­னர்.

சிண்டா, முஸ்­லிம் லீக் (சிங்­கப்­பூர்), பிஸ்மி வானொலி ஆகி­ய­வற்­று­டன் 'டீம் நூர்' என்ற இளை­யர் குழு­வும் கைகொ­டுத்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதி­வா­சி­கள், ஜாமியா அற நிறு­வனத்­தின் தாதிமை இல்­ல­வா­சி­கள், இந்­திய முஸ்­லிம் பேர­வை­யி­டம் உதவி பெற்று வரு­வோர் எனப் பல்­லி­னச் சமூ­கத்­திற்­குச் சுமார் 500 உண­வுப் பொட்­ட­லங்­களை 'டீம் நூர்' விநி­யோ­கம் செய்ய உத­வி­யது. இந்­திய முஸ்­லிம் பேர­வை­யு­டன் அமைப்­பு­கள் இணைந்து உத­வி­யது இந்த நோன்­புப் பெரு­நாளை மேலும் அர்த்தமுள்ளதாக்கியது.