குழந்தை பிறப்பும் பராமரிப்பும்: கொவிட்-19 தொற்றுச் சூழலில் சவால்மிக்கதொரு பயணம்

குழந்தை பிறப்பும் பராமரிப்பும்: கொவிட்-19 தொற்றுச் சூழலில் சவால்மிக்கதொரு பயணம்

3 mins read
0f1b6425-d19b-461b-b9e0-0c91e577a349
தங்களின் ஒரு வயது குழந்தையுடன் திலகவதி-கமல்ஜித் தம்பதியர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்­தாண்டு கிரு­மிப் பர­வல் முறி­யடிப்­புக் கால­கட்­டத்­தில் 35 வயது தில­க­வதி ராஜ­சே­க­ரம் தமது முதல் பிள்­ளை­யைப் பெற்­றெ­டுத்­தார். ஓராண்டு ஆகி­யுள்ள நிலை­யில் பிள்­ளைப்­பேறு குறித்து இன்­னும் சிறிது அச்­சம் உண்டு என்று இவர் கூறு­கி­றார்.

"மீண்­டும் கிரு­மிப் பர­வல் அதி­கரித்து வரு­கிறது. குழந்தை பெற்­றுக்­கொள்­வ­தைத் தள்­ளிப்­போட என்­னைப் போன்ற பெற்­றோ­ரும் தயங்­கு­வர் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் மருத்­து­வக் கருவி உற்­பத்­தித் துறை­யில் பணி­யாற்­றும் திரு­மதி தில­க­வதி. 2019ல் ஆகஸ்ட் மாதத்­தின்­போது கருத்­த­ரித்த தில­க­வதி, கடந்­தாண்டு ஏற்­பட்ட கவலை­யும் அச்­ச­மும் இன்­றும் தமக்­குள் இருப்­ப­தாக தெரி­வித்­தார்.

வேலை ஆத­ர­வுத் திட்­டங்­கள் நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­ட­போ­தும் பொரு­ளி­யல் தாக்­கத்தை ஈடு­கட்ட அவை போது­மா­னதா என்­பது குறித்து சிங்­கப்­பூ­ரில் பொது­வான ஒரு கவலை உள்­ளது.

கர்ப்­ப­மாக இருந்த கால­கட்­டத்­தில் தம்­மு­டைய பெற்­றோர் ஒத்­தாசை­யாக இருக்க முடி­யா­தது கவலை அளித்­தது என்று கூறிய தில­க­வதி, இப்­போது தம் மகன் ஒரு வய­தா­கும் நிலை­யி­லும் அவர்­கள் அடிக்­கடி வர இய­லாத சூழல் நில­வு­வ­தா­கக் கூறி­னார். கிரு­மிச் சூழ­லில் சவால்­கள் ஏரா­ள­மாக இருந்­தா­லும் குழந்தை பிறந்த பிறகு தங்­க­ளின் இல்­லற வாழ்க்­கை­யில் மகிழ்ச்­சி­யும் அன்­பும் அதி­க­ரித்­திருப்­ப­தாக தில­க­வ­தி­யும் அவ­ரின் கண­வ­ரும் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

இரண்­டா­வது குழந்­தை­யைப் பெற்­றுக்­கொள்ள விரும்­பு­வ­தா­க­வும் தம்­ப­தி­யர் தெரி­வித்­த­னர்.

"ஒரு குழந்­தையை வளர்ப்­ப­தன் மூலம் மனி­த­ரின் வளர்ச்­சி­யைப் பற்றி மேலும் அறிய முடி­கிறது," என்­றார் குழந்­தை­யின் தந்தை கமல்­ஜித் சிங், 37.

தொற்­றுச் சூழ­லால் குடும்­பத்­தில் தள்­ளிப்­போ­கும் திட்­டங்கள்

சிங்­கப்­பூ­ரின் மொத்த கரு­வள விகி­தம் (fertility rate) கடந்­தாண்டு இது­வரை இல்லா அள­வில் குறைந்­தி­ருப்­ப­தாக பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம் 26ஆம் தேதி­யன்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். திரு­ம­ணத்­தை­யும் குழந்தை பெற்­றுக்­கொள்­வ­தை­யும் தம்­ப­தி­கள் தள்­ளிப்­போ­டு­வ­தற்­குத் தற்­போ­தைய கிரு­மிப் பர­வல் கார­ணம் எனச் சுட்­டி­னார் அவர்.

இரண்­டா­வது பிள்­ளை­யைப் பெற்­றுக்­கொள்­ளும் சிங்­கப்­பூ­ரர்­கள், தங்­கள் பிள்ளை மேம்­பாட்டு கணக்­கி­லுள்ள பணத்­தின் ஒவ்­வொரு வெள்­ளிக்­கும் நிக­ராக அர­சாங்­கம் நிரப்­பும் அதி­க­பட்ச தொகை­யாக 3,000 வெள்­ளி­யி­லி­ருந்து 6,000 வெள்ளி வரை பெற­லாம். இது ஜன­வரி 1 முதல் பிறக்­கும் குழந்­தை­க­ளுக்­குப் பொருந்­தும்.

கிரு­மிச் சூழ­லில் கர்ப்­பி­ணி­கள் எதிர்­நோக்­கும் அபா­யம்

இதற்­கி­டையே, கர்ப்­பி­ணிப் பெண்­கள் தொடர்ந்து கூடு­தல் அபா­யத்தை எதிர்­நோக்­கு­வ­தா­கக் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த மருத்­து­வத் துறை இணை பேரா­சி­ரி­யர் ஷெபாலி ஷோரே தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"ஒரு கர்ப்­பி­ணி­யின் உட­லில் அடிக்­கடி மாறும் 'ஹார்­மோன்'களால் நோய்த்­த­டுப்பு சக்­தி­யும் பாதிப்­ப­டை­கிறது. அந்­நி­லை­யில் முகக்­க­வ­சத்தை அணி­வது மேலும் சிர­ம­மாகிறது," என்று கூறி­னார். இத­னால் சுகா­தா­ரப் பழக்­க­வ­ழக்­கங்­களைப் பின்­பற்­று­வது, அடிக்­கடி உட­லின் வெப்­ப­நி­லை­யைச் சோதிப்­பது போன்­ற­வற்­றைக் கர்ப்­பி­ணி­கள் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றார்.

புதி­தாக குழந்தை பெறும் பெற்­றோர், குறிப்­பாக தாய்­மார்­க­ளின் மன­நிலை எளி­தில் பாதிக்­கப்­படும் பட்­சத்­தில் கிரு­மிப் பர­வல் சூழல் சில நேரங்­களில் சிக்­கலை அதி­கரிக்­கக்­கூ­டும் என்­றார்.

உங்­கள் வாழ்க்­கைத் துணைக்கு ஆறு­த­லாக இருங்­கள்

"மனை­விக்கு இருக்­கும் பயத்­தைக் கண­வரோ கண­வ­ருக்கு உள்ள பயத்தை மனை­வியோ குறைத்து மதிப்­பி­டா­மல் புரிந்­து­ணர்­வு­டன் நடந்­து­கொண்­டால் தேவை­ இல்­லாத மன வருத்­தம் ஏற்­ப­டாது," என்று அவர் கூறி­னார். புதி­தாக பெற்­றோ­ரா­கும் தம்­ப­தி­ய­ருக்­குத் தேவை­யான வளங்­கள் மருத்­து­வ­மனை­க­ளி­லும் பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் இருப்­பதை அவர் சுட்டி­னார். இந்­நே­ரத்­தில் மன­ந­லத்­தைக் காப்­பது முக்­கி­யம் என்று வலி­யுறுத்­திய டாக்­டர் ஷெஃபாலி, எரிச்­சல், மனச்­சோர்வு, சோகம் ஆகி­ய­வற்றை அதி­க­ள­வில் உண­ரும்­போது இதன் தொடர்­பி­லான உத­வியை உட­னடி­யாக நாடும்­படி கேட்­டுக்­கொண்­டார்.

"மன­ந­லம் தொடர்­பான உதவி நாடு­வது என வரும்­போது அதைத் தள்­ளிப் போடா­மல் நம் மீது நாமே அன்பு காட்­டும் வழி­யாக அந்த உத­வி­யைக் கருத வேண்­டும்," என்­றார் அவர்.

செய்தி: கி. ஜனார்த்­த­னன்