சிங்கப்பூரில் கடந்த 24 ஆண்டுகளாக மூத்த பேருந்து ஓட்டுநர் வேலையில் இருக்கிறார் மலேசியரான
திரு இளங்கோவன், 55. இவர் தமது 32வது வயதில் சிங்கப்பூரில் வேலை செய்யத் தொடங்கினார்.
மலாக்காவிலுள்ள தம் வீட்டுக்கு மாதம் இரு முறை சென்று குடும்பத்தைப் பார்த்து வந்த அவர், நினைத்த நேரத்தில் குடும்பத்தைக் காண முடியவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்தபோதும் பிள்ளைகளுக்காக உழைக்கிறோம் என்ற எண்ணம் இவரைத் தொடர்ந்து ஊக்குவித்தது. சென்ற ஆண்டு சிங்கப்பூர்-மலேசிய எல்லைப்பகுதி மூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தம் குடும்பத்தினரை, சிங்கப்பூரில் தாம் தங்கியிருக்கும் பிடோக் வீட்டிற்கு வரவழைத்தார்.
இப்போது ஒரே வீட்டில் தங்கி தந்தையர் தினத்தைக் கொண்டாட முடிந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக திரு இளங்கோவனின் மூத்த மகள் நர்மதா, 20, கூறுகிறார்.
செய்தி: கி. ஜனார்த்தனன், படம்: திரு இளங்கோவன்