கடந்த ஜூலை 27ஆம் தேதி, இந்தியாவின் மறைந்த முன்னாள் அதிபர் அப்துல் கலாம் அவர்களின் 6வது நினைவுதினத்தை அனுசரிக்கும் நோக்கில் சிங்கப்பூர் அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தினர் ஈசூன் ஸ்ரீ நாராயண மிஷனில் மதிய உணவுவிருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.
அவர்களின் அன்றைய மதிய உணவிற்கான செலவினை இல்லத்தின் தலைமை நிர்வாகி திரு.தேவேந்திரனிடம் அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் தலைவர் திரு கே. கேசவபாணி வழங்கினார்.
இந்திய அதிபர் மாளிகையில் ஒவ்வோர் ஆண்டும் ‘இஃப்தார் விருந்து’ அளிக்கும் நிகழ்வை தமது ஐந்தாண்டு பதவி காலத்தின்போது மாற்றியவர் டாக்டர் அப்துல் கலாம். தமது பதவிகாலத்தில் விருந்தை நடத்தாமல், அதற்கான செலவைவிட சற்று அதிகமான தொகையை அவர் ஆதரவற்றவர்களுக்கு அளித்து வந்தார் என்று அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தினர்.