'மருத்துவரை விட ஆசிரியர் என்பதுதான் மனநிறைவு தருகிறது'

'மருத்துவரை விட ஆசிரியர் என்பதுதான் மனநிறைவு தருகிறது'

2 mins read
7450238e-9bba-4268-8bda-892a90f89681
மாணவர்களுடன் டாக்டர் ராமானுஜம் பரமானந்தம். -

'டாக்­டர் பரம்' என்று அன்போடு அழைக்கப்படும் நன்­யாங் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யின் மூத்த விரி­வு­ரை­யா­ளர் டாக்­டர் ராமா­னு­ஜம் பர­மா­னந்­தம் தமது ஆசிரியர் பய­ணத்தை 1996இல் தொடங்­கி­னார். 25 ஆண்­டு­களுக்கு முன்னர் மருத்­து­வத்தில் முது­நிலைப் பட்­டம் பெற்று மருத்­து­வ­ராகப் பணி­ புரிந்­த­ காலத்தில், நோயா­ளிகளுக்குச் சிகிச்­சை­ அளிப்பதற்கும் அப்பால், அவர்களுடைய உடல் பிரச்சி­னையைத் தெளி­வாக விளக்கி அதுகுறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­துவதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

"ஆசி­ரி­ய­ராக தற்போது என்னால் ஆயிரக்கணக்­கானவர்களுக்கு உதவும் சிறந்த சுகா­தாரத் துறை நிபு­ணர்­களை உரு­வாக்க முடி­கிறது. கற்­பித்­த­லில் ஆர்­வம் கொண்ட எனக்கு ஆசி­ரி­யர் துறை ஏற்­றதாக உள்ளது," என்­றார் டாக்­டர் பர­மா­னந்­தம்.

உடற்­கூ­றி­யல், உட­லி­யல், நோயி­யல் மற்­றும் நோய் இயற்­பி­யல் ஆகிய பாடங்­களைத் தாதிமை மாண­வர்­க­ளுக்கு இவர் கற்றுத் தரு­கி­றார். புதிய மாண­வர்­க­ளுடன், மேம்­பட்ட பட்­டயக் கல்வி பெறும் தாதி­யருக்கும் நிபு­ணர் க­ளுக்­கும் பாடம் எடுக்கிறார்.

தமது முன்­னாள் மாண­வர்­கள், அடுத்தடுத்த ஆண்டுக்குச் சென்ற பிற­கும்கூட கேள்­வி­கள் இருந்­தால் தம்மை நாடி­வ­ரு­வர் என்று பெரு­மி­தத்­து­டன் கூறி­னார் டாக்டர் பர­மா­னந்­தம்.

தற்­போ­து தாதி­யர்­களாக உள்ள இவரது மாணவர்கள்கூட பணிசார்ந்த ஐயங்­களைத் தீர்த்­துக்­கொள்­ள­வும் புதிய தகவல்களைப் பெற­வும் இவரை நாடு­வார்கள்.

"பாடத்­தில் புரி­யாததைத் தெளி­வு படுத்தி, அது இறு­தி­யில் அவர்­க­ளுக்கு புரி­யும்­போது அவர்­க­ளது முகத்­தில் தென்­படும் மலர்ச்­சி­தான் இத்தொழில் எனக்கு கொடுக்­கும் மன­நி­றைவு. இன்­றைய மாணவர்களின் ­வாழ்க்கை பர ப­ரப்­பானது. எல்­லா­வற்­றை­யும்விட தர­மான கற்­பித்­த­லையே அவர்கள் வர­வேற்­கின்­ற­னர். அதனால் பாடத்­தின் உள்­ள­டக்­கம் அதி­க­மாக இருந்­தால் அதைப் பாகங்களாகப் பிரித்து புரிந்து­ கொள்­ளக்­கூ­டிய விதத்­தில் கற்­றுத்­தர வேண்­டும்." என்­றார் அவர்.

வாழ்க்கையில் தமக்கு உந்துசக்தி தருபவர்கள் தமது மாணவர்கள்தான் என்று கூறும் டாக்டர் பரமானந்தம், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப தம்மைத் தயார்படுத்திக்கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருவதாகத் தமிழ் முரசிடம் கூறினார்.

இன்­றைய மாண­வர்­கள் தொழில்­நுட்­பத்­தில் அதிக அனு­ப­வ­மும் அறி­வும் கொண்­ட­வர்­கள் என்பதால் அவர்­களுக்கு ஈடு­கொ­டுத்து தாமும் புதிய தொழில்­நுட்ப உத்­தி­களைப் பயன்படுத்தி, மாண­வர்­க­ளின் கற்­றல் பயணத்தை எளி­மை­யாக்க வேண்­டும் என்பது இவரது அடுத்த இலக்கு.