தீபாவளியை முன்னிட்டு மார்சிலிங் ரைசில் உள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ணா கோவிலின் நிர்வாகக் குழு உறுப் பினர்களும் தொண்டூழியர்களும் இணைந்து மார்சிலிங், உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு இம்மாதம் 23ஆம் தேதி அன்பளிப்புப் பைகளை வழங்கினார்கள்.
ஓரறை, ஈரறை வீடுகளில் வசிக்கும் சுமார் 30 பேருக்கு அன்பளிப்புப் பைகள் அளிக்கப்பட்டன.
நூறு வெள்ளி மதிப்பிலான பலகாரங்களும் (முறுக்கு, லட்டு), தீபாவளி அலங்காரப் பொருட்களும் அன்பளிப்புப் பைகளில் வைக்கப்பட்டிருந்தன. அன்பளிப்புப் பைகளைப் பெற்றுக்கொண்ட குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அன்பளிப்புப் பைகளை மாதம்தோறும் வழங்கத் திட்டமிடுவதாகக் கோயில் நிர்வாகம் தெரி வித்தது.

