ஆஸ்துமா போராட்டத்தைத் தவிர்க்கலாம்

சிங்கப்பூரில் 5% பெரியவர்களுக்கும்

20% சிறாருக்கும் ஆஸ்துமா உள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன. உறிஞ்சி (இன்ஹேலர்) பயன்பாடு அதிகரித்து

உள்ளதால் ஆஸ்துமாவால் நேரும் உயிரிழப்புகள்

கடந்த பத்தாண்டில் குறைந்துள்ளன. இருப்பினும்,

சரியான உறிஞ்சியை முறையாக பயன்படுத்தாத நிலையில் அது ஆஸ்துமா தாக்குதலுக்கும் மரணத்திற்கும் இட்டுச் செல்லலாம். அவ்வாறு மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய ஆஸ்துமா நோயாளி ஒருவரை தமிழ் முரசு சந்தித்துப் பேசியது.

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

விடிய விடிய இசைக் கச்­சே­ரி­யில் மூழ்­கி­வி­டு­ப­வர்­தான் இசைக்­க­ரு­வி­களை வாசிக்­கும் கலை­ஞர் திரு மெய்­ய­ழ­கன் கந்­த­சாமி. 47 வய­தில் இவ­ருக்கு முதல் ஆஸ்­துமா தாக்கு­தல் ஏற்­பட்­டது. சுவா­சிக்க உத­வும் 'வென்­டி­லேட்­டர்' கருவி பொருத்­தப்­பட்டு சில நாட்­கள் தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றார்.

வீடு திரும்­பும்­போது, 'பிரிவென்டர் இன்ஹேலர்' எனும் உறிஞ்சியும் மற்ற மருந்­து­களும் இவ­ருக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டன. ஆனால் அவர் அவற்­றைப் பயன்­படுத்­த­வில்லை.

தமக்கு நேர்ந்த ஆஸ்­துமா தாக்கு­தல், ஒருமுறை மட்­டுமே வந்­த­தெனக் கருதி, ஆஸ்­துமா தாக்­கு­த­லுக்­குப் பிறகு வேறு மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளுக்கு அவர் செல்­ல­வில்லை.

அவர் குடும்­பத்­தில் அவ­ரு­டைய தாயா­ருக்கு ஆஸ்­துமா நோய் இருக்­கிறது. எப்­போ­தெல்­லாம் திரு மெய்­ய­ழ­க­னுக்கு மூச்­சுத் திண­றல் ஏற்­பட்­டதோ அப்­போ­தெல்­லாம் தாயா­ரின் 'ரிலீவர் இன்ஹேலர்' எனும் நிவா­ரண உறிஞ்சியை அவர் பயன்­படுத்­தினார்.

இந்த வழக்­கம் சில ஆண்­டு­களுக்கு நீடித்­தது. திரு மெய்­ய­ழ­கனுக்­குப் புகை­பி­டிக்­கும் பழக்­க­மும் இருந்­தது.

நாள­டை­வில் இந்த அலட்­சி­யப்­போக்கு ஆபத்­தில் கொண்­டு­போய்­விட்­டது. 2016ஆம் ஆண்­டில், மீண்டும் மூச்­சுத் திண­றல் ஏற்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அவர் அனு­மதிக்­கப்­பட்­டார்.

மறு­ப­டி­யும் 'வென்­டி­லேட்­டர்' கருவி­யின் உத­வி­யு­டன் சுவா­சித்து, பின்­னர் உயிர் காப்பு அமைப்பு ஆத­ர­வில் தம் உயி­ரைக் கையில் பிடித்­தி­ருந்­தார்.

மீண்­டும் உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கும் இந்­தச் சம்­ப­வம் நடந்த பிறகு, அவர் பாடம் கற்­றுக்­கொண்­டார். புகை­பி­டிப்­ப­தைக் கைவிட்­டார்.

பரிந்­து­ரைக்­கப்­பட்ட மருந்­து­களை முறை­யாக உட்­கொள்ள தொடங்­கி­னார். இரவு வேளை­யில் இசைக் கச்­சே­ரி­களில் ஈடு­ப­டு­வதை நிறுத்­திக்­கொண்­டார்.

ஆரோக்­கிய வாழ்க்­கை­மு­றையை அன்­றி­லி­ருந்து கடைப்­பி­டித்து வரு­வதா­கக் கூறி­னார் 55 வயது திரு மெய்­ய­ழ­கன். ஆஸ்­துமா தாக்­கு­தல் வந்த பிறகு மருந்து நாடும் பழக்­கத்­தைக் கைவிட வேண்­டும் என்றார் அவர்.

ஆஸ்­து­மா­வைக் கட்­டுப்­ப­டுத்த தடுப்பு ஆஸ்­துமா இன்­ஹே­லரை முறை­யா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் நிவா­ரண உறிஞ்சியை அதி­கம் பயன்­ப­டுத்­து­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்­றும் அவர் விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!