சுற்றுலாத் துறைக்குப் புத்துயிர், பொருளியலுக்குப் புதுத்தெம்பு

'விடி­எல்' எனப்­படும் தடுப்­பூ­சி போட்­டோ­ருக்­கான பய­ணத்தடத் திட்­டம் இந்­தி­யா­விற்­கும் நீட்­டிக்கப்­படும் என்பது லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் இயங்­கி­வ­ரும் பயண முகவர்­க­ளுக்கு நம்­பிக்­கை தரும் நற்­செய்­தி­யா­கவே அமைந்­துள்ளது.

குறிப்­பாக, சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து இந்­தி­யா­ செல்வோருக்கும் இந்­தி­யா­வி­லி­ருந்து இங்கு வரு­வோ­ருக்­கும் உள்ள பயண ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­வந்­த­வர்­க­ளின் வாழ்வாதாரம் மீண்­டும் சீரா­கும் என்ற நிம்மதி பிறந்துள்­ளது.

கடந்த பல ஆண்­டு­க­ளாக இயங்கி­ வ­ரும் ரங்­கூன் ஏர் டிரா­வல் நிறு­வ­னம், 'தேக்கா பிளேஸ்' (முந்­திய 'தி வெர்ஜ்') கட்­ட­டத்­தில் அடி­யெ­டுத்து வைத்த சில மாதங்­

க­ளி­லேயே கொரோனா கிரு­மிப் பர­வல் தொடங்கியது. அதனால் வர்த்­தகம் முடங்கியது.

கடந்த ஆண்டு கிரு­மிப் பர­வல் தலை­தூக்­கியது முதல் இம்­மா­தம் இறு­தி­வ­ரை அவர்­கள் தங்­கள் அலு­வ­ல­கத்தைத் தற்­கா­லி­க­மாக மூடி­விட்­ட­னர்.

ஏற்­கெ­னவே டிசம்­பர் மாதம் முதல் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து செயல்­ப­ட­லாம் என்ற திட்­டத்­தில் இருந்த அவர்­க­ளுக்கு, இந்தியா வுக்கு 'விடி­எல்' திட்­டம் தொடங்­க­வி­ருப்­பது வர­வேற்­கத்­தக்க அம்­ச­மாக உள்­ளது.

"இன்­றைய சூழ­லில் இங்­கி­ருந்து இந்­தியா செல்ல அதிக தேவை இருக்­கிறது. ஆனால் விமா­னச் சேவை­க­ளுக்­குத்­தான் தட்­டுப்­பாடு ஏற்பட்டுள்ளது," என்­றார் ரங்­கூன் ஏர் டிரா­வல் நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் திரு ஜக­பர் சாதிக், 37.

"'விடி­எல்' திட்­டம் தொடங்­கி­ய­தும் சிங்கப்பூர்-இந்தியா விமா­னப் போக்குவரத்­தால் இருவழி­க­ளி­லும் பய­ணி­கள் அதிக எண்­ணிக்­கை­யில் வந்து போவார்­கள்.

"நம் பொரு­ளி­ய­லுக்கு அது நன்மை அளிக்­கும். அதே நேரத்­தில், 'விடி­எல்' திட்­டத்­தால் நீண்ட கால­மா­கத் தொய்­வ­டைந்த சுற்­று­லாத் துறைக்கே இத்திட்டம் புத்­து­யிர் அளிக்­கும்," என்­றார் திரு சாதிக்.

'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் இயங்கும் விமா­னச் சேவை­கள் குறித்த அட்­ட­வணை இன்­னும் வெளி­வ­ர­வில்லை. விரை­வில் வரும் என்ற எதிர்­பார்ப்­பில் பய­ணி­களும் முக­வர்­களும் உள்­ள­னர்.

'விடி­எல்' திட்­டம் தவிர்த்து, நோய்ப் பர­வல் காலத்­திற்கு முந்­திய காலம்போல மீண்­டும் பய­ணி­கள் விமா­னச் சேவை­களை சிங்­கப்­பூர்-இந்­தியா இடை­யில் தடை­யின்றி இயக்க இருநாட்டு அர­சாங்­கங்­களும் முயற்சி எடுக்­க­வேண்­டும் என்று பல பய­ணச் சேவை முக­வர்­கள் விரும்புகின்றனர்.

அத்துடன், திருச்சி விமான நிலையத்திற்கு 'விடி­எல்' சேவை இயக்கப்பட்டால் பெரும் வரவேற்பை பெரும் என்பது 'தஞ்சை டிராவல் அண்ட் டூர்ஸ்' நிறுவனத்தின் திரு அப்துல் காதரின் கருத்து.

நோய்ப் பரவல் சூழலுக்கு முந்திய காலத்திலும் திருச்சிக்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர் என்றார் 'பேரடைஸ் டூர்ஸ்' நிறு வனத்தின் உரிமையாளர் திரு சிராஜ்.

"வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் பெரும்பாலும் திருச்சி அருகே உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். அத்துடன் பல சுற்றுலாத்தலங்கள் அப்பகுதியைச் சுற்றி உள்ளதால் சிங்கப்பூரர்களும் அவ்வழியே பயணம் செய்கிறார்கள். 'விடி­எல்' திட்டம் அங்கும் வந்தால் சிறப்பு," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!