இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்குப் பலன் அளிக்கும் திட்டமானது தடுப்பூசி போட்டோருக்கான பயணத்தடத் திட்டம் (விடிஎல்). இந்தத் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட விமானச் சேவை
களின் மூலம் சிங்கப்பூர் வருவோர், இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டிய தேவை, வரும் 29ஆம் தேதி முதல் இராது. இத்திட்டத்தின்கீழ் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வருவோர் சில நிபந்தனைகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
முதலில், அவர்கள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டு இரண்டு வாரங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். தடுப்பூசிச் சான்றிதழை வைத்தி ருக்க வேண்டும். அதோடு சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோர், 'விடிஎல்' திட்டத்தில் பயணம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வருவோருக்கான 'விடிஎல்' அனுமதி விண்ணப்பங்கள் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பயணம் தொடங்கும் நேரத்திற்கு 48 மணி நேரம் முன்னதாக 'பிசிஆர்' கொவிட்-19 பரிசோதனையை அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் செய்துகொள்ளவேண்டும். சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் மீண்டும் ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் முடிவுகள் வரும்வரை பயணிகள் தங்கள் இல்லங்களிலோ விடுதிகளிலோ தனிமையில் இருக்கவேண்டும்.
'தொற்று இல்லை' என முடிவுகள் வந்தவுடன் இயல்பு வாழ்க்கையை அவர்கள் தொடரலாம். எந்தெந்த விமான நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து 'விடிஎல்' திட்ட விமானச் சேவைகளை வழங்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருநாட்டு விமானப் பயண ஏற்பாடுகள் முடிவு செய்யப்பட்ட தும் மேல் விவரங்கள் கிடைத்தபின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) குழுமம் தகவல் தெரிவிக்கும் என அந்நிறுவனப் பேச்சாளர் தமிழ் முரசிடம் தெரி வித்தார். ஆணையங்களின் அனு
மதிக்குட்பட்டு, பயணத் தேவை
களைத் தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து சேவைகளின் எண்ணிக்கையை அதற்கேற்ப சரிசெய்வோம் என்றது எஸ்ஐஏ.
'விடிஎல்' திட்டத்தின்கீழ் உலகின் பல நகரங்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிக எண்ணிக்கையில் பயணச் சேவைகளை வழங்கிவருகிறது.

