பெஞ்சுரு நிலையத்தில் நெஞ்சினிக்கும் கொண்டாட்டம்

பெஞ்சுரு நிலையத்தில் நெஞ்சினிக்கும் கொண்டாட்டம்

1 mins read
cbb038b3-62db-4c8e-8ad6-b965b4c98786
-
multi-img1 of 2

கடந்த ஈராண்­டு­க­ளா­கப் பெரும்­பாலும் ஆள­ர­வ­மின்றி முடங்­கிக் கிடந்த பெஞ்­சுரு கேளிக்கை நிலை­யம், நேற்று முன்­தி­னம் பொங்­கல் திரு­நா­ளன்று மாலை­யில் ஆர­வா­ரத்­து­டன் புத்துயிர் பெற்றது.

அங்கு பொங்­கல் கொண்­டாட்­டங்­கள் இடம்­பெற்­றதே இதற்­குக் கார­ணம்.

கியட் ஹோங் இளை­யர் குழு ஏற்­பாடு செய்த இந்த நிகழ்ச்­சி­யில் காற்­பந்து, கூடைப்­பந்து போன்ற விளை­யாட்­டு­க­ளு­டன் ஆடல் பாடல் அங்­கங்­கள் இடம்­பெற்­றன.

திரும்­பிய பக்­கம் எல்­லாம் நட­வடிக்­கை­கள். என்­றா­லும், சமூக இடை­வெளி காப்­ப­தில் ஊழி­யர்­கள் கவ­ன­மாய் இருந்­த­னர்.

1,600க்கும் மேற்­பட்­டோ­ருக்­கு முகக்­க­வ­சங்­களும் கைச்­சுத்­தி­க­ரிப்­பா­னும் அடங்­கிய அன்­ப­ளிப்­புப் பைகள் வழங்­கப்­பட்­டன.

பொங்­கல் திரு­நாள், நன்­றி உணர்வை கற்­றுத்தரும் அரு­மை­யான திரு­நாள் என்­றார் நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ரான சுவா சூ காங் குழுத்­தொ­குதி எம்.பி. ஸுல்­கர்­னைன் அப்­துல் ரஹிம்.

"சொந்த ஊரில் இருப்­ப­தைப் போன்ற கொண்­டாட்ட உணர்வை இங்­கும் என்­னால் உணர முடிந்­ததை நினைத்து மகிழ்­கி­றேன்," என்­றார் பாண்­டிச்­சே­ரி­யைச் சேர்ந்த திரு முரு­க­தாஸ் பிர­வீன், 23.

செய்தி: கி.ஜனார்த்தனன், படங்கள்: திமத்தி டேவிட்