மாடுகளைக் கண்டு மனம் மகிழ்ந்த மக்கள்

மாடுகளைக் கண்டு மனம் மகிழ்ந்த மக்கள்

1 mins read
0d1073eb-52a4-4a50-aa00-022976148e57
மாட்டுப் பொங்கல் நாளான நேற்று கிளைவ் ஸ்திரீட்டில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாட்டுப் பண்ணையில் இருக்கும் மாடுகளை அலங்கரித்து, வழிபட்ட பின்னர் அவற்றுக்குச் சர்க்கரைப் பொங்கல் படைக்கப்பட்டது. படம்: திமத்தி டேவிட் -

சக்தி மேகனா

உல­கிற்கு உண­வ­ளிக்­கும் உழ­வுத்­தொ­ழி­லுக்கு உற்ற தோழ­னாய் விளங்­கும் கால்­ந­டைச் செல்­வங்­க­ளைச் சிறப்­பிக்­கும் நன்­னா­ளாம் மாட்­டுப் பொங்­க­லான நேற்று லிட்­டில் இந்­தி­யா­வில் தற்­கா­லி­க­மா­கக் குடி­யே­றியிருந்த மாடு­களை ஏரா­ள­மா­னோர் கண்டு, உள்­ளம் மகிழ்ந்­த­னர்.

'போலி அட் கிளைவ் ஸ்திரீட்டில்' உள்ள அந்தத் தற்காலிகப் பண்ணையில் இருக்கும் தங்களது மாடுகளுக்கு விக்னேஷ் மாட்டுப் பண்ணையினரும் அவர்தம் குடும்பத்தினரும் பட்டாடை அணிவித்து, மலர்மாலை சூட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, சாம்பிராணி காட்டி வழிபட்டனர். பின்னர் மாடுகளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைக்கப்பட்டது.

எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் வந்து, மாடுகளைக் கண்டுசென்றதாகக் கூறிய லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் செயலாளர் திரு ருத்திராபதி, சமூகத்தின் ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குழந்தைகள் மாடுகளுடன் பேசி மகிழ்வதையும் இளையர்கள் பலர் வந்து செல்வதையும் காணும்போது இன்பமாக உள்ளது என்றார் 'ஜூனியர் குப்பண்ணா' உணவக உரிமையாளர் திரு பிரகாஷ்.

"எங்களுக்கு இது ஒரு புதிய அனுபவம். பொங்கல் திருநாளின்போது மக்களின் உணர்வுகளைப் பார்க்கும்போது எங்களுக்கு மெய்சிலிர்கிறது," என்றார் பிரிட்டனில் இருந்து தம் கணவருடன் வந்திருக்கும் சுற்றுப்பயணி திருவாட்டி கிளேர்.

இவ்வாண்டு பிற இனத்தவரும் தமிழ்க் கலாசாரத்தை அறிந்துகொண்டு, ஒன்றுகூடி மாட்டுப் பொங்கலைக் கொண்டாடினர்.