தேசியப் பல்கலைக்கழகத்தில் மேடையேறும் சாந்தா பாஸ்கரின் இறுதி கலைப்படைப்பு

தேசியப் பல்கலைக்கழகத்தில் மேடையேறும் சாந்தா பாஸ்கரின் இறுதி கலைப்படைப்பு

2 mins read
80819f8b-084e-4e8a-96cd-c2f50264d0f0
நடனமேதை சாந்தா பாஸ்கர் இந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி காலமானார். படம்: சிங்கப்பூர் விமன்ஸ் ஹால் ஆஃப் ஃபேம் -

தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கக் கலை நிலை­யத்­தின் இந்­திய நட­னப் பிரிவு, அண்­மை­யில் கால­மான பிரபல நடன மேதை திரு­மதி சாந்தா பாஸ்­க­ரின் இறு­திப் படைப்பான 'தன்மை' எனும் நடனத்தை அரங்­கேற்­ற­வி­ருக்­கிறது.

2022ஆம் ஆண்­டின் தேசி­யப் பல்­க­லைக்­க­ழகக் கலை விழா­வின் இறுதி நிகழ்ச்­சி­யாக, வரும் ஞாயிற்றுக்­கி­ழமை மார்ச் 27ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு, பல்கலைக்­க­ழகக் கலா­சார நிலைய அரங்­கில் இது இடம்­பெ­றும்.

"ஆசி­ரியை திரு­மதி சாந்தா பாஸ்­கர் அவர்­கள் இதற்­கான நடன அசை­வு­களை முன்­னரே வடிவமைத்து­விட்­டார். தீவி­ர­ ஒத்திகை­க­ள் மூலம் அவற்றை மெரு­கூட்­டிக்­கொண்­டி­ருந்­தார். அவரது இறுதி மூச்சு பிரி­யும் வரை­யி­லும் எங்­களை நிகழ்ச்­சிக்­குத் தயார்ப்­ப­டுத்­து­வ­தில் முனைப்­பு­டன் இருந்­தார்," என்று கூறி­னார் தேசியப் பல்­க­லைக்­க­ழக இந்­திய நட­னப் பிரி­வின் தலை­வரான பி. அனு பிரியா.

"ஆசிரியர் என்பதற்கும் மேலாக அன்புக்குரிய மதியுரைஞராக, எங்கள் நடனப் பயணத்தில் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்த அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. திருமதி சாந்தா பாஸ்கருக்கு நாங்கள் செலுத்தும் நினைவஞ்சலியாக இந்நிகழ்ச்சி அமையும்," என்றார் அவர்.

சம­கால பரதநாட்­டிய நட­ன­மான 'தன்மை', தேசி­யப் பல்­க­லைக்­க­ழகக் கலை­வி­ழா­வுக்­காக திரு­மதி சாந்தா உரு­வாக்­கிய தனிப்­பட்ட படைப்பு. தொட்­டு­ணர முடி­யாத அம்­ச­மான ஒளி பல்­வேறு வகை­களில் எவ்வாறு நம் வாழ்க்­கை­யில் பங்கு வகிக்­கிறது என்­பதை விளக்­கும் நட­னப் படைப்பு அது.

ஒளிக் கலை­ஞர் ஜோஷுவா யாங், மின்­னி­லக்க இசைத் தயாரிப்பா­ளர் மரியோ வனே­கஸ், இசை­ய­மைப்­பா­ள­ரும் கலை­ஞ­ரு­மான டாக்­டர் கானவிநோ­தன், அரங்க ஒளி­வ­டி­வ­மைப்­பா­ளர் அல்­பெர்ட்டோ விலியோ ஆகி­யோர் இணைந்து இந்த நிகழ்ச்­சி­யைப் படைக்­க­வி­ருக்­கின்­ற­னர்.

தமது தனித்­து­வ­மான நடன அமைப்­பிற்­குப் புகழ்­பெற்ற திரு­மதி சாந்தா பாஸ்­கர், சிங்­கப்­பூ­ரின் கலைத்­து­றைக்கு ஆற்­றிய பங்களிப்புக்­காக 1990ல் அர­சாங்­கம் அவ­ருக்கு கலா­சா­ரப் பதக்­கம் வழங்கி கௌர­வித்­தது. பொதுச்­சேவை நட்­சத்­திர விருது, சிறப்­பு­மிக்க சேவைக்­கான பதக்­கம் ஆகி­ய­வை­யும் அவ­ருக்­குப் புகழ்­சேர்த்­தன.