பழம்பெரும் தமிழாசிரியர் டேனியல் காலமானார்

பழம்பெரும் தமிழாசிரியர் டேனியல் காலமானார்

3 mins read
4a876e82-644a-4996-966f-94c5a341ca4d
மறைந்த ஆசிரியர் டேனியல். படம்: சாமிக்கண்ணு -

சிங்­கப்­பூ­ர் கல்­வித்­துறையின் முன்­னோ­டி­யாக எண்­ணி­ல­டங்கா மாண­வர்­களை மேலு­யர்த்­திய மூத்த ஆசி­ரி­யர் திரு எஸ். டேனி­யல் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று கால­மா­னார்.

65 ஆண்­டு­க­ளுக்கு மேல் நீடித்த அவ­ரின் தமிழ்ப்­ ப­ணி­யும் ஆசி­ரியப்­பணி­யும் அவ­ரது 84வது வயதில் ஒரு நிறைவை நாடி­யது.

தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவை ஏற்பாடு செய்திருந்த 2017ஆம் ஆண்டின் நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளராகக் கௌரவிக்கப்பட்டார் திரு டேனியல்.

செயிண்ட் ஜார்­ஜஸ் தமிழ்ப்­பள்­ளி­யில் திரு டேனி­ய­லின் ஆசி­ரி­யப் பணி தொடங்­கி­யது. சிங்­கப்­பூ­ரின் கல்­வித்­துறை வர­லாறு, அவ­ரின் பங்­க­ளிப்­பு­க­ளின்றி நிறை­வடை­யாது.

'சிறு­வர் தமிழ்' பாட­நூல், பயிற்சி­நூல்­களை வகுத்­த சிங்­கப்­பூர் பாடத்­திட்ட மேம்­பாட்­டுக் கழ­கத்­தின் திட்ட இயக்­கு­ந­ராக திரு டேனி­யல் பொறுப்பு வகித்­தார். இவை சிங்­கப்­பூ­ரின் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கான முதல் பாடத்­திட்ட நூல்­க­ளா­கும்.

சிங்­கப்­பூர் பாடத்­திட்ட மேம்­பாட்­டுக் கழ­கத்­தில் ஆசி­ரி­யர் டேனி­ய­லு­டன் 1983ஆம் ஆண்­டி­லி­ருந்து 1988ஆம் ஆண்டு வரை நெருங்­கிப் பணி­யாற்­றி­ய திரு சாமிக்­கண்ணு அவரைப்ப பற்றி நினைவுகூர்ந்தார்.

"சிறந்த ஆசி­ரி­ய­ரா­க­வும், இனிய நண்­ப­ரா­க­வும், நல்ல மனி­த­ரா­க­வும் ஆசி­ரி­யர் டேனி­யல் இருந்­தார். அவ­ரோடு 80களில் பணி­பு­ரிந்த அனு­ப­வம் மறக்­க­மு­டி­யா­தது. சக ஆசி­ரி­யர்­க­ளுக்கு வழி­காட்­டியாக இருந்த அவர், என்­றுமே பணி­வாக இருந்­தார்.

"அவ­ரின் பங்­க­ளிப்­பு­கள் ஈடு­செய்ய முடி­யா­தவை," என்­றார் சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தின் ஆலோ­ச­க­ரும் முன்­னாள் தலை­வரு­மான 73 வயது திரு சாமிக்­கண்ணு.

தாம் மாண­வ­ராக இருந்த காலத்­தி­லி­ருந்தே ஆசி­ரி­ய­ரா­கத் தடம் பதித்­துக்­கொண்­டி­ருந்த திரு டேனி­ய­லின் அதிர்­வற்­ற போக்­குப் பல­ரைக் கவர்ந்­ததை அவர் நினைவு­கூர்ந்­தார்.

கல்வி அமைச்­சில் தமது பய­ணத்­தைத் திரு டேனி­யல் தொடங்கி வைத்­த­தாக நினை­வு­கூர்ந்­தார் தற்­போது கல்வி அமைச்­சின் சிங்­கப்­பூர் ஆசி­ரி­யர் கலைக்­க­ழ­கத்­தில் தலைமை முதன்மை ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றும் 66 வயது திரு ஜெய­ரா­ஜ­தாஸ் பாண்­டி­யன்.

"இளம் வய­தில் எனக்கு அனு­ப­வம் குறை­வாக இருந்­த­தைப் பொருட்­ப­டுத்­தா­மல், என்­மீது நம்­பிக்கை வைத்­து, பல பொறுப்­பு­களை என்­னி­டம் கொடுத்­தார். நான் தலை­மை­யேற்­ற குழுக்­க­ளில்­கூட உறுப்­பி­ன­ரா­கச் செய­லாற்றி ஆலோசனைகூறும் அள­வுக்கு அவர் பெரிய மனது கொண்­ட­வர். தமிழாசிரி­யர்­களில் ஒரு சாணக்­கி­ய­ராக அவ­ரைக் குறிப்­பி­டு­வதே தகும்," என்­றார் திரு ஜெய­ரா­ஜ­தாஸ் பாண்­டி­யன்.

தொலை­நோக்­குப் பார்வை கொண்­டி­ருந்த ஆசி­ரி­யர் திரு டேனி­யல், 1982ஆம் ஆண்­டில் எழுத்­துச் சீர­மைப்­பு குறித்­தப் போராட்­டம் நடந்­து­கொண்­டி­ருக்­கை­யில், சிறு­வர் தமிழ் புத்­த­கத்தை சீர்­தி­ருத்த எழுத்­துக்­க­ளு­டன் வெளி­யி­டப் பரிந்­து­ரைத்­தார்.

இக்­கட்­டா­ன சூழ­லில் சரி­யான நேரத்­தில் அவர் எடுத்த முடி­வி­னால்­தான் சிறு­வர் தமிழ் புத்­த­கம் பல­கா­லம் பயன்பாட்டில் இருந்­தது என திரு ஜெய­ரா­ஜ­தாஸ் பாண்­டி­யன் குறிப்­பிட்­டார்.

கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­க­ளுக்கு முன் பணி ஓய்வு பெற்­ற­ பின்னரும், திரு டேனி­ய­லின் தமிழ்ப்­பணி தொடர்ந்து ஓயவில்லை. மாண­வர்­களுக்­கா­கத் தம்மை அர்ப்­ப­ணித்த அவர், தொடர்ந்து பல்­வேறு பள்­ளி­களில் மூத்­த தமி­ழா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வந்­தார்.

தொடக்­கப்­பள்ளி முதல் தொடக்­கக் கல்­லூரி வரை பல்­வேறு மாண­வர்­க­ளின் பய­ணங்­களில் வழிகாட்டியாக இருந்துள்ளார் திரு டேனி­யல். அவர் ஆசி­ரி­ய­ரா­கக் கடை­சி­யாக தேசிய தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பணி­யாற்­றி­னார்.

"2007ஆம் ஆண்­டில் கட்­டொ­ழுங்கு ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்த என்­னி­டம், கோபப்­ப­டு­வ­தைத் தவிர்க்­க­வேண்­டும் என்­றும், மாண­வர்­க­ளி­டம் ஆசி­ரி­யர்­கள் பெற்­றோ­ரைப்­போல் நடந்­து­கொள்­ள­வேண்­டும் என்­றும் பொறு­மை­யாக எடுத்­து­ரைத்­தார். கண்­ணி­ய­மான மனி­த­ரும், பண்­பா­ள­ரு­மான திரு டேனியல் எனது சிந்­த­னை­களை மாற்­றி­ய­மைத்­துள்­ளார்," என்­றார் சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தின் தலை­வ­ரான 50 வயது திரு தன­பால் குமார்.

இன்று மதியம் ஒரு மணிவரை வீடு எண் 08-367, வீவக புளோக் 414, சிராங்கூன் சென்ட்ரலில் ஆசிரியர் டேனியலுக்கு அஞ்சலி செலுத்தலாம்.

விவ­ரங்­க­ளுக்கு www.sgvigil.com/AS2364 எனும் இணை­யத்­தளத்தை நாட­லாம்.

ஆ. விஷ்ணு வர்தினி