தமிழ் மொழி விழா 2022ன் ஓர் அங்கமாக தமிழவேள் நற்பணி மன்றம், "நாளை நமதே" என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்நிகழ்ச்சி மெய்நிகரில் அடுத்த மாதம் மூன்றாம் தேதியன்று காலை மூன்று மணி முதல் நண்பகல் 12 மணிவரை நடைபெறும்.
"சிங்கப்பூரின் 4 அதிகாரத்துவ மொழிகளில் இளம் பேச்சாளர்கள் உரையாற்றவிருப்பது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.
"தமிழ் மொழியின் வருங்காலம், மொழியின் தேவைகளைச் சமூகத்திடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது, இளையர்கள் அனைத்துலக அரங்கில் தனித்துவம் பெற எவ்வாறு திறன்களை வளர்த்துக்கொண்டு சமூகத்திற்குப் பங்களிப்பது, மாறிவரும் கலாசாரப் பின்னணியில் வாழும் மொழியாகத் தமிழ் நீடித்து நிலைத்திருப்பதற்கான வழி வகைகள், இரு மொழித் திறன் ஆகியவை குறித்தும் அலசி ஆராயப்படும்," என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவருமான, குமாரி கலைவாணி இளங்கோ தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இணைய ஸூம் எண்: 828 4471 9127, கடவுச்சொல்: 019728.
செய்தி: எம். இலியாஸ்