சென்ற ஆண்டு சிண்டா இளையர் விருதை பெற்ற 60 பேரில் தலைசிறந்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 19 வயது காமாக்ஷி ரவிக்குமார் யேஷா (படம்).
சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் இளையர் பிரிவில் பலதரப்பட்ட பொறுப்புகளை ஏற்று சாதித்துள்ள இவர் தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஆரம்பகால வளர்ச்சி மற்றும் கல்வி பட்டயப் படிப்பு மேற்கொண்டிருக்கிறார்.
தன்னை மேம்படுத்திக்கொண்ட பிறகு தன்னை சுற்றியுள்ள சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற ஆசை யேஷாவுக்கு ஏற்பட்டது.
தன்னைப் போன்ற இளையர்களுக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு சிண்டாவில் தொண்டூழியராகவும் இருக்கிறார் யேஷா.
ஹர்ஷிதா பாலாஜி