இலங்கையில் ஏற்பட்ட காயங்கள் சிங்கப்பூரில் ஆறின

இலங்கையில் ஏற்பட்ட காயங்கள் சிங்கப்பூரில் ஆறின

3 mins read
52a554a9-4006-4f26-aa92-2e3b8705ac3c
மோ. அ. சூசைதாசன். படம்: கி. ஜனார்த்தனன் -

இலங்­கை­யில் உயர்­நி­லைப்பள்ளி வகுப்பில் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது தேசிய தேர்வு எழு­து­வ­தற்கு மூன்று நாள்­க­ளுக்கு முன்­னர் திரு மோசஸ் அன்­டன் சூசை­தா­ச­னின் வீடு அப்போது நடந்த இனக்கலவரத்தில் எரிக்­கப்­பட்­டது. பாடப் புத்­த­கங்­கள், சீருடை ஆகிய பொருள்­களை இழந்து அதிர்ச்­சி­யில் உறைந்­து­போ­யி­ருந்த நேரத்­தில் அந்­தத் தேர்வை இவர் எழு­த­வேண்­டி­யி­ருந்­தது.

இலங்­கை­யில் நிகழ்ந்த இனப்­பூ­சல், உள்­நாட்­டுப் போர் ஆகி­ய­வற்­றால் திரு தாச­னின் மனதில் ஏற்­பட்ட ஆழ­மான வடுக்­கள் இன நல்­லி­ணக்­கம் நிறைந்த சிங்­கப்­பூ­ரில் ஆறின. இலங்­கை­யில் நில­விய உள்­நாட்­டுப் பூசலை செரி­வான விவ­ரங்­க­ளு­டன் எளிய மொழி­நடை­யில் 'இது கதை­யல்ல' என்ற நாவ­லா­கத் தமது உருக்­க­மான வாழ்க்கை அனு­ப­வங்­களின் பின்னணியில் இவர் எழு­தி­யுள்­ளார்.

இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று அப்­பர் புக்­கிட் தீமா ரோட்­டி­லுள்ள 'செல்­வே­ஷன் ஆர்மி'யில் நடை­பெற்ற இந்­நூ­லின் வெளி­யீட்டு விழா­வில் வர்த்தக மூத்த துணை அமைச்­சர் சீ ஹோங் டாட் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டார்.

இலங்­கை­யின் மேற்­குக் கடற்­கரைக்கு அரு­கி­லுள்ள புத்­த­ளம் என்ற நக­ரில் 1968ஆம் ஆண்டு பிறந்த திரு தாசன், ஆசி­ரி­ய­ராக இருந்த தமது தந்தை, தாயார், மூன்று சகோ­த­ரர்­கள் ஆகி­யோ­ரு­டன் வளர்ந்­தார். ஆரம்­பத்­தில் அங்­கி­ருந்த அமை­தி­யான, மகிழ்ச்­சி­யான வாழ்க்கை, இனக்கலவரத்தால் எப்­படி கலைந்­தது என்­பதை விவ­ரித்து எழு­தி­யுள்­ளார். குறிப்­பாக ஐந்து முறை அவர் நூலி­ழை­யில் தப்­பிய சம்­ப­வங்­கள் குறித்த தக­வல்­களும் இந்­நா­வ­லில் இடம்­பெற்­றுள்­ளன.

பிரிட்­ட­னில் இள­நிலை, முது­நிலைப் பட்­டக்­கல்வி பயின்ற இவர், அங்­கேயே தங்­கத் திட்­ட­மிட்­ட­போதும் சிங்­கப்­பூரின் பாது­காப்­பும் இங்கு தமி­ழுக்­குத் தரப்­படும் முக்கி­யத்­து­வ­மும் பிடித்­துப்­போய் இங்கே வாழ முடிவு­செய்­த­தா­கக் கூறி­னார். பிரிட்­ட­னில் இனப் பாகு­பாடு அடிப்­படை­யி­ல் தொல்­லை­க­ளைச் சந்­தித்த திரு தாசன், சிங்­கப்­பூ­ரின் சகிப்­புத்­தன்மைமிக்க சூழ­லால் நிம்­மதி பெரு­மூச்சு விட்­ட­தா­கக் குறிப்­பிட்டார்.

கட்­டு­மா­னத் துறை­யில் பொறி­யா­ள­ரா­கத் தொடங்கி 25 ஆண்டு­களா­க இங்கு பணி­பு­ரிந்­து­வ­ரும் இவர், தோ பாயோவில் மனைவி­யு­ட­னும் ஆனந்த், யாழினி ஆகிய தமது பிள்­ளை­க­ளு­ட­னும் வசிக்­கி­றார்.

2020ஆம் ஆண்டு இலங்கையில் சுற்றுலா சென்றபோது திரு தாசனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்று மாதங்கள் மருத்துவ விடுப்பில் இருந்தபோது தமது நண்பர் புத்தகம் எழுதப் பரிந்துரைத்ததாக இவர் கூறினார்.

கொவிட்-19 சூழலால் தமது நூலைச் சென்ற ஆண்டு வெளியிட முடியாமல் போக, திரு சீ ஹோங் டாட்டின் ஊக்குவிப்பால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

வேலை­யா­லும் தாம் ஈடு­பட்ட சமூ­கப் பணி­க­ளா­லும் ஏற்­பட்ட நேரப் பற்­றாக்­கு­றை­யால் அதி­கம் வாசிக்க முடி­ய­வில்லை என்று திரு தாசன் வருத்­தத்­து­டன் குறிப்­பிட்­டார். அத­னால் தமது சொந்த நடை­யில் மிக எளி­மை­யாக எழு­த­வேண்­டி­யி­ருந்­த­தா­கக் கூறி­னார்.

"எந்த ஓர் எழுத்­தா­ள­ரின் பாணி­யை­யும் தழு­வா­மல் நான் எனது பாணியில் எழுதினேன்.. இலங்­கைத் தமிழ், இந்­தி­யத் தமிழ், சிங்­கப்­பூர்த் தமிழ் ஆகியவற்றைக் கலந்த ஒரு தனி பாணி எனது எழுத்­தில் தென்­பட்­டது," என்று திரு தாசன் கூறி­னார். வர­லாற்­றுச் சம்­ப­வங்­க­ளைச் சொந்த நினை­வு­க­ளு­டன் மட்­டு­மல்­லா­மல் அதனை ஆய்­வு­க­ளின் மூலம் சரி­பார்க்க வேண்டியிருந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

திரு தாசனின் கதை கூறும் பாங்கு பாராட்டுக்குரியது என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர் ஆ. பழனியப்பன் தமிழ் முரசிடம் கூறினார். திரு தாசனின் புத்தகம் சிங்கப்பூரின் நல்லிணக்கத்திற்கான நன்றியுணர்வைப் புகட்டுவதாக மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியோவ் சுவான் தெரிவித்தார்.

கி. ஜனார்த்தனன்