கருவுறாமையால் ஏற்படும் வேதனைகளை விவரிக்கும் 'பத்மா'

கருவுறாமையால் ஏற்படும் வேதனைகளை விவரிக்கும் 'பத்மா'

1 mins read
4f6063f7-b76a-4036-b12e-de60ea170e9b
-
multi-img1 of 2

இந்­திய கலா­சா­ரத்­தில் தலை­முறை தலை­மு­றை­யாக ஒரு பெண் எத்­தனை குழந்­தை­களை ஈன்­றெ­டுக்­கி­றாள் என்­பதைப் பொறுத்து அவ­ளுக்கு அதற்கு ஏற்­ற­வாறு மதிப்­பும் மரி­யா­தை­யும் தரப்­ப­டு­கிறது.

கருத்­த­ரிக்க முடி­யா­மல் சிர­மப்­படும் இந்­தி­யப் பெண்­க­ளைப் பற்றி அதி­கம் பேசப்­ப­டு­வ­தில்லை.

இந்­நி­லை­யில் கரு­வு­றா­மை­யால் பாதிக்­கப்­படும் இரண்டு இந்­தி­யப் பெண்­க­ளைப் பற்றி திரு­வாட்டி மாலா மகேஷ் (படம்) கதை நூல் ஒன்றைப் புனைந்­துள்­ளார்.

'பத்மா' என்ற தலைப்பு கொண்ட இந்த நூல் அமேசான் இணை­யத் தளம் மூலம் நாளை வெளி­யி­டப்­

ப­டு­கிறது. நூலில் இரண்டு கதை­கள் இடம்­பெ­று­கின்­றன.

அவற்­றில் ஒன்று 1900களில் கேர­ளா­வில் வாழும் 16 வயது அழகு சீமாட்டி பத்­மா­வைப் பற்றி விவ­ரிக்­கிறது.

இன்­னொரு கதை இக்­கா­லக்­கட்­டத்­தில் மும்­பை­யில் விளம்­பர நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் நைனா­வைப் பற்­றி­யது.

திரு­ம­ண­மா­கி­யும் இரு­வ­ருக்­கும் மகப்­பேறு இல்­லாத சூழ்­நிலை. இத­னால் அவர்­க­ளுக்கு ஏற்­படும் சவால்­கள், மன­வே­த­னை­கள் பற்றி 'பத்மா' கதை­நூல் எடுத்­து­ரைக்­கிறது. மின்­னூல் வடி­வில் வாங்­கி­னால் இதன் விலை $7.21. புத்­தக வடி­வில் வாங்­கி­னால் இதன் விலை $23.99.