நட்புடன் மலர்ந்த நோன்புத் துறப்பு

நட்புடன் மலர்ந்த நோன்புத் துறப்பு

2 mins read
969a6486-8cd4-4a73-b5b8-05ec35a2a5c9
(இடமிருந்து) சிங்கப்பூருக்கான துருக்கிய தூதர் மெக்மத் புச்சின், சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அஸ்ஃபார் முகம்மது முஸாஃபர், பால்வி பள்ளிவாசலின் சமயப் போதகர் ஹபிப் ஹசான் அல் அத்தாஸ், தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதர் ஜோனதன் கேப்லன், 'ரோசஸ் ஆஃப் பீஸ்' நிறுவனர் முகம்மது இர்ஷாத், சிங்கப்பூருக்கான அமெரிக்கத் துணைத் தூதர் ரஃபிக் மன்சூர். படம்: 'ரோசஸ் ஆஃப் பீஸ்' -

கி. ஜனார்த்­த­னன்

பல்­வேறு சம­யங்­க­ளைச் சேர்ந்த பிர­தி­நி­தி­களை வர­வ­ழைத்து 'ரோசஸ் ஆஃப் பீஸ்' என்ற அமைப்பு, நோன்பு துறப்பு விருந்தை நடத்­தி­யது.

ராஃபிள்ஸ் டவுன் கிளப்­பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற இந்த விருந்­தில் அனைத்­து­லகத் தூதர்­கள், சமூக அமைப்­பு­க­ளின் தலை­வர்­கள் சுமார் 30 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூ­ருக்­கான அமெ­ரிக்கத் தூதர் ஜோன­தன் கேப்­லன், சிங்­கப்­பூ­ருக்­கான மலே­சியத் தூதர் அஸ்­ஃபார் முகம்­மது முஸா­ஃபர், சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தோ­னீ­சியத் தூதர் சூர்யோ பிர­தோமோ உள்­ளிட்ட அனைத்­து­லகப் பிர­மு­கர்­கள், இந்­நாட்­டின் தலை­வர்­க­ளு­டன் பழகி சம­யம் சார்ந்த தக­வல்க­ளைப் பற்றி கலந்­து­ரை­யா­டி­னர்.

ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு அனை­வ­ரும் நேர­டி­யாக ஒன்­று­கூடி தங்­க­ளது நட்­பை­ப் புதுப்­பிக்­கும் வாய்ப்­பி­னை­ப் பெற்­றுக்­கொண்­ட­னர். புதிய அறி­மு­கங்­க­ளின் மூலம் நல்­லி­ணக்­கத்தை வளர்க்­க­வும் இந்த விருந்து ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தாக 'ரோசஸ் ஆஃப் பீஸ்' அமைப்­பின் நிறு­வ­ன­ரும் தலை­வ­ரு­மான முகம்­மது இர்­ஷாத், 32, தெரி­வித்­தார்.

நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட அனை­வ­ருமே தங்­க­ளது கருத்­து­களை வெளிப்­ப­டை­யா­கப் பேச அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

தற்­காப்பு, மனி­த­வள மூத்­த துணை ­அமைச்­சர் ஸாக்கி

முகம்­மது இந்­நி­கழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார். இன­ நல்­லி­ணத்துக்­கான வலு­வான அடித்­த­ளத்தை நம் முன்­னோர்­கள் விட்­டு­வைத்­துள்­ள­தா­க­வும் அத­னைக் கொண்டு அமை­தி ­யான நாட்டை உரு­வாக்­கும் பொறுப்பு தற்­போ­தைய சமு­தா­யத்­திற்கு இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார். இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­மர் திரு லீ குவான் இயூவின் பிரதானச் செய­லா­ள­ராகவும்

ஜிஐ­சி­யின் தலை­வ­ரா­க­வும் இருந்த லிம் சியோங் வான், "கௌர­வம் சிங்­கப்­பூ­ருக்கு மிக­வும் முக்­கி­யம். சொன்ன சொல்­லைக் கட்­டிக்காப்ப­தி­லும் மக்­க­ளின் மனி­தத்­

தன்­மைக்கு மதிப்­பு கொடுப்­ப­திலும் சிங்­கப்­பூர் பெருமைகொள்­கிறது," என்­று தெரிவித்தார்.

1950ல் சிங்­கப்­பூ­ரில் இனக் கல­

வ­ரத்­தைக் கண்­கூ­டா­கக் கண்ட சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் மூத்த அர­சி­யல் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திரு ஸைனுல் அபி­தீன் ரஷித், சிங்கப்பூர் வெகு­வாக முன்­னே­றி­உள்­ள­தைக் கண்டு அக­ம­கிழ்­வ­

தா­கக் கூறி­னார்.