தொழிலாளர் தினத்தை முன்னிட்டு லிஷா இலக்கிய மன்றம், அபிராமி நகைக்கடை மற்றும் சென்னை டிரேடிங் ஆதரவுடன் வெளிநாட்டு ஊழியர்களுக்காக இசை, நடன நிகழ்ச்சி ஒன்று அவர்கள் தங்கும் கோக்ரேன் பொழுதுபோக்கு மையத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் மணிமாறன் குழுவினரின் நடனம், லிஷா இலக்கியமன்றத்தின் பாடகர்கள் பரசுகல்யான், விக்டர், நிர்மலா, அயந்திகா, லட்சுமி சங்கரன், அமர்த்திகா சக்ரவர்த்தி ஆகியோர் இன்னிசை மழை பொழிய இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியை கண்ணன் சேஷாத்ரி மற்றும் அனின் அன்சாரி தொகுத்து வழங்க உள்ளனர். ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரித்து அவர்களது உழைப்புக்கு நன்றி கூறும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது.