புலவரைப் போற்றிய பரதப் போட்டி

புலவரைப் போற்றிய பரதப் போட்டி

3 mins read
4e09cd7b-04b4-4695-bfb3-50f80b07b3e9
துணையமைச்சர் ஆல்வின் டான் (நடுவில்), ஏற்பாட்டுக் குழுவினருடன் புதுமையான பரதப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடனமணிகள். படம்: ஓம்கார் ஆர்ட்ஸ் -

மாதங்கி இளங்­கோ­வன்

ஓம்­கார் ஆர்ட்ஸ் நிறு­வ­ன­மும் பெக் கியோ சமூக மன்ற இந்­திய நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வும் இணைந்து 'கவி­யும் நாட்­டி­ய­மும்' என்ற பர­த­நாட்­டி­யப் போட்­டிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

சென்ற சனிக்­கி­ழமை நடந்த போட்­டி­யில் பங்­கெ­டுத்­த­வர்­கள் தமிழ்ப் பாடல்­க­ளுக்கு நட­ன­மா­டி­ய­தோடு ஒரு நிமி­டத்­திற்கு தாங்­கள் தேர்ந்­தெ­டுத்த கவிதை நயம் மிக்க பாட­லைப் பற்றி விவ­ரித்­துப் பேச வேண்­டி­யி­ருந்­தது. கலை­யின் வாயி­லாக தமிழ்ப் புழக்­கத்தை மேம்­ப­டுத்­து­வது இதன் இலக்கு.

இந்­நி­கழ்ச்­சிக்கு சிறப்பு விருந்­தி­ன­ராக வரு­கை­ய­ளித்த கலா­சார, சமூக, இளை­யர் துறைத் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் போட்­டி­யா­ளர்­க­ளுக்­குப் பரி­ச­ளித்­துப் பாராட்­டி­னார்.

பர­த­நாட்­டிய போட்­டி­களை ஈராண்­டுக்கு ஒரு­முறை ஏற்­பாடு செய்­யும் ஓம்­கார் ஆர்ட்ஸ், இவ்­வாண்டு மீண்­டும் நேரடி நிகழ்ச்­சி­யாக அதனை நடத்­து­வது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்­தது.

"மேடை­யில் ஆடி மக்­க­ளின் கைத்­தட்­ட­லைக் கேட்­கும்­போது கிடைக்­கும் பெரு­மித உணர்வு நடன கலை­ஞர்­க­ளுக்­குத்­தான் புரி­யும். அது வார்த்­தை­க­ளால் விவ­ரிக்க முடி­யாத ஓர் உணர்ச்சி," என்­றார் ஓம்­கார் ஆர்ட்­ஸின் உரி­மை­யா­ள­ரான ஸ்ரீதேவி.

போட்­டி­யின் நடு­வர்­க­ளாக உள்­ளூர்ப் பிர­ப­லங்­கள் விக்­னேஸ்­வரி வடி­வ­ழ­க­னும் செல்­வா­வும் செயல்­பட்­ட­னர். மூன்று பிரி­வு­களில் போட்டி இடம்­பெற்­றது.

தனிப் பிரி­வில் 13 வயது முதல் 18 வயது வரை­யி­லான இளை­யர்­கள் ஒரு பிரி­வா­க­வும் மற்­றொன்­றில் 19 முதல் 26 வயது வரை­யி­லான பெரி­ய­வர்­களும் கலந்­து­கொண்­ட­னர். குழுப் பிரி­வின் கீழ் ஏழு குழுக்­கள் பங்­கேற்­றன.

பர­த­நாட்­டி­யத்­திற்­கும் கவி­தைக்­கும் இடையே இருக்­கும் உறவு மிக­வும் நெருக்­க­மா­னது என்­ப­தால் அத­னையே இவ்­வாண்­டின் போட்­டிக்­குக் கருப்­பொ­ரு­ளா­கத் தேர்ந்­தெ­டுத்­த­தா­கக் கூறி­யது ஓம்­கார் ஆர்ட்ஸ்.

பர­த­நாட்­டிய நட­ன­ம­ணி­கள் தெலுங்கு, சமஸ்­கி­ரு­தம், தமிழ் எனப் பல இந்­திய மொழி­க­ளின் பாடல்­க­ளுக்கு ஆடி­னா­லும் அவ­ர­வர் தாய்­மொ­ழி­யில் அமைந்த பாடல் வரி­க­ளுக்கு நட­மி­டும்­போ­தும் முக­பா­வ­னையை வெளிக்­காட்­டும்­போ­தும் மட்­டற்ற மகிழ்ச்­சி­ய­டை­வர் என்­ற­னர் ஏற்­பாட்­டா­ளர்­கள்.

பார­தி­யார் உள்­ளிட்ட புகழ்­பெற்ற புல­வர்­க­ளின் பாடல்­க­ளுக்கு வெவ்­வேறு நட­னப் பள்­ளி­க­ளி­லி­ருந்து வந்த நட­ன­ம­ணி­கள் நட­ன­மா­டி­னர். 'மறைந்­தி­ருந்து பார்க்­கும் மர்­மம் என்ன' போன்ற தமிழ்த் திரைப்­படப் பாடல்­க­ளுக்­கும் சிலர் அழ­காக நட­ன­மா­டி­னர்.

குழுப் பிரி­வில் வெற்­றி­பெற்ற 'தர்­ஷன் ஃபைன் ஆர்ட்ஸின்' அஸ்­வினி கணே­சன் இப்­போட்­டி­யில் கலந்­து­கொண்­ட­தால் தனது சக நட­ன­ம­ணி­க­ளோடு உறவு வலுப்­பெற்­ற­தா­கக் கூறி­னார். பள்ளி, வேலை என பல விஷ­யங்­களை சமா­ளிக்க வேண்­டும் என்­றா­லும் ஒவ்­வொரு வார­மும் ஒன்­று­சேர்ந்து இப்­போட்­டிக்கு நேரம் ஒதுக்கி நட­னப் பயிற்­சி­களை மேற்­கொண்­டது தங்­க­ளு­டைய குழு உணர்ச்­சியை வளர்த்­துள்­ளது என்று அவர் குறிப்­பிட்­டார். மற்ற குழுக்­க­ளின் நட­ன­மணி­கள் அரங்­கேற்­றிய அழ­கான படைப்­பு­க­ளைக் காண­வும் தங்­க­ளுக்கு இது நல்ல வாய்ப்­பாக அமைந்­தது என்­றார் அஸ்­வினி.

பெரி­யோர் பிரி­வில் 24 வயது சுவேதா ஜெய­பால் வெற்­றி­வாகை சூடி­னார். "ஈராண்­டு­க­ளுக்­குப் பின்­னர் மக்­க­ளுக்கு முன் மேடை­யில் ஆடு­வது எனக்கு மிகுந்த மகிழ்ச்­சி­யைத் தந்­துள்­ளது. சுவை­யான கருப்­பொ­ரு­ளோடு தமிழ்ப் புழக்­கத்தை ஊக்­கு­விக்­கும் விதத்­தி­லும் நடை­பெற்ற போட்­டி­யின் ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்­கும் நடன ஆசி­ரியை ஸ்வர்ண வர்ஷா குரு­மூர்த்தி அவர்­க­ளுக்­கும் எனது மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்," என்­றார் அவர்.

மெத்­த­டிஸ்ட் பெண்­கள் பள்ளி மாண­வர்­கள் கிளி­க­ளைப் போல பச்சை நிற ஆடை­ய­ணிந்து கிளி கௌத்­து­வம் என்ற புது­மை­யான நட­னப் படைப்பை மேடை­யேற்­றி­னர். ஸ்ரீதே­வி­யின் மாண­வர்­கள் மண்பானைகளின்மேல் கண்­ணுக்கு விருந்­த­ளிக்­கும் நட­னத்­தைப் படைத்­த­னர்.